25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று 05.09.2026 மற்றும் 07.09.2026 ஆகிய தேதிகளில் குடிமைப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று 05.09.2026 மற்றும் 07.09.2026 ஆகிய தேதிகளில் குடிமைப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

மேலும், கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற செப்டம்பர் 2026 மாதத்தில் 05.09.2026 (சனிக்கிழமை) மற்றும் 07.09.2026 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News