ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் , இவை இருந்தால் பல அரசு வேலைகள் எளிதாகும். 1.ஆதார் அட்டை - அடையாளத்திற்கு மிக முக்கியம். 2.குடும்ப அட்டை - அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் அவசியம். 3.PAN கார்டு - வங்கி, வரி மற்றும் நிதி செயல்களுக்கு. 4.வாக்காளர் அட்டை - வாக்களிக்கும் உரிமைக்கு மிக முக்கியமானது. 5.பிறப்புச் சான்றிதழ் - கல்வி, பாஸ்போர்ட் மற்றும் அரசு பதிவுகளுக்கு.. 6.வருமானச் சான்றிதழ் - உதவித் தொகை, கல்வி மற்றும் அரசு சலுகைகளுக்கு. 7.சமூக சான்றிதழ் - கல்வி,மற்றும்வேலைவாய்ப்பு அரசு திட்டங்களுக்கு. 8.இருப்பிடச் சான்றிதழ் - முகவரி நிரூபிக்க அவசியமானது. 9.வங்கி PASSBOOK - அரசு நிதி உதவிகள் மற்றும் வங்கி செயல்களுக்கு. 10.DRIVING LICENCE / PASSPORT - ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டுஅடையாளம் மற்றும் பயணத்திற்குத் தேவையானது.
பெண்களின் பருவப்பெயர்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். 5-7 வயது பெண் - பேதை 8-11 வயது பெண் - பெதும்பை 12-13 வயது பெண் -மங்கை 14-19 வயது பெண்-மடந்தை 20-25 வயது பெண் - அரிவை 26-31 வயது பெண்- தெரிவை 32-40 வயது பெண் - பேரிளம்பெண்
மருத்துவர்களின் ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை தானாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, கடும் வெயிலால் உடல் வெப்பநிலை அதிகரிப்பது, மயக்கம் அல்லது சோர்வு ஏற்படுவது போன்ற அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என நினைத்து பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை கொடுக்கக்கூடாது. வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
இந்திய பயணிகள் இனி Emirates விமான , டிக்கெட்டுகளை ஒரே தவணையாக செலுத்த வேண்டியதில்லை. 3 முதல் 36 மாதங்கள் வரை EMI முறையில் கட்டணத்தை செலுத்தி, சுமார் 140 இடங்களுக்கு பயணம் முன்பதிவு செய்யலாம்.
HPCL நிறுவனத்துடன் இணைந்துInstamart, HP Navya என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையின் மூலம் வழக்கமான வீட்டு LPG இணைப்பு இல்லாதவர்களும் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையிலான சிறிய சிலிண்டர்களை ஆர்டர் செய்யலாம்.சேவையின் அம்சங்கள்:கேஸ் இணைப்பு இல்லாமலும் வாங்கும் வசதி. எடுத்துச் செல்ல எளிதான வடிவமைப்பு. பாதுகாப்பு தரநிலைகளுடன் தயாரிக்கப்பட்டது. அவசர மற்றும் குறுகிய கால தேவைகளுக்கு ஏற்ற சேவை.
தற்போது நிலவும் மெமரி பற்றாக்குறையால் தொழில் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ஜோஹோ தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தாமல் இருந்தாலும், கடந்த ஓராண்டில் மெமரி விலைகள் 500 சதவீதம் வரை அதிகரித்திருப்பது தொழில்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களின் அதிகரித்து வரும் தேவையே மெமரி சில்லுகளுக்கான விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த நிலை விரைவில் சீராகும் அறிகுறிகள் தென்படாத நிலையில், மெமரி விலை உயர்வுடன் AI டோக்கன் செலவுகளும் இணைந்து மென்பொருள் நிறுவனங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.“கடந்த 12 மாதங்களில் மெமரி விலைகள் 500 சதவீதம் உயர்ந்துள்ளன” என்ற சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஸ்ரீதர் வேம்பு X தளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.“மெமரி மற்றும் AI டோக்கன் விலைகள் வணிகத்தை மிகவும் கடினமாக்கியுள்ளன. நாங்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறோம், ஆனால் நிலைமை கடினமாகி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.Tom’s Hardware வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, சில DDR5 மெமரி கிட்களின் சராசரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சுமார் $90 ஆக இருந்த சில கிட்களின் விலை தற்போது $425 வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.அதிக திறன் கொண்ட மெமரி கிட்களில் விலை உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. உதாரணமாக, 128GB DDR5-6400 கிட் ஒன்றின் விலை தற்போது $3,399 வரை சென்றுள்ளதாகவும், அதன் வரலாற்றிலேயே குறைந்த விலையான $329-ஐ ஒப்பிடும்போது இது சுமார் 10 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனங்களை மட்டுமின்றி, மென்பொருள் நிறுவனங்களையும் பாதித்து வருகிறது. Oppo, OnePlus, Vivo, Nothing உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமீப மாதங்களில் விலையை உயர்த்தியுள்ளன. ஆப்பிள் நிறுவனமும் எதிர்காலத்தில் iPhone விலையை உயர்த்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.மெமரி பற்றாக்குறை என்பது வன்பொருள் துறைக்கு மட்டுமல்லாமல், மென்பொருள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஸ்ரீதர் வேம்பு கருதுகிறார்.“நீண்ட காலமாக, மெமரி இலவசமானது என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே நிரலாக்க மொழிகள் வடிவமைக்கப்பட்டன. அந்த சகாப்தம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.AI பயன்பாடுகளுக்குக்கூட மெமரியை சிக்கனமாகப் பயன்படுத்தும் நிரலாக்க மொழிகளும், அதிக திறன் கொண்ட கம்பைலர்களும் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நிரல்களின் பாதுகாப்பு மற்றும் உருவாக்கத்தில் கிடைக்கும் உற்பத்தித்திறன் ஆகியவை பாதிக்கப்படாமல், மெமரி பயன்பாட்டை குறைப்பது குறித்த ஆய்வில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் ரூ.16,000 கோடி மதிப்பில் டைட்டானியம் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து அதானி குழுமம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.Adani Ports நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து இந்தத் திட்டம் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.இதனுடன், டேட்டா சென்டர் மற்றும் IT பூங்கா அமைப்பதற்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே போர் விமான எஞ்சின்களை தயாரிக்கும் நோக்கில் Reliance நிறுவனம் Rolls-Royce உடன் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவில் எஞ்சின் உற்பத்தி மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.Rolls-Royce நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவமும், Reliance நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் இணையும் பட்சத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் இது முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும்.
முதலமைச்சர் விஜய் அறிவித்த பெண்களுக்கான மாதம் ரூ.2,500 உரிமைத்தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.இந்தத் தொகையைப் பெற பயனாளிகள் மூன்று முக்கிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.விரல்ரேகை அல்லது மொபைல் OTP மூலம் ஆதார் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.குடும்ப ஸ்மார்ட் கார்டுடன் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 24, 25, 26: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.மிதமான மழை பெய்யக்கூடிய பகுதிகள்:குற்றாலம்பாபநாசம்தென்காசிஅச்சன்கோவில்செங்கோட்டைஆரியங்காவுகடனாநதிபுளியரைராமநதி நீர்ப்பிடிப்பு பகுதிகள்மேக்கரைமணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள்பண்பொழிஇதனால் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.