இன்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் சீனாவின் ஹாங்சு நகரில், இன்றுதுவங்குகிறது. உலகத் தரவரிசையில் 'டாப்-8' இடம் பிடித்த ஆண்கள் இரட்டையர் ஜோடி 2025ம் ஆண்டில் விளையாடிய பல்வேறு தொடர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, பங்கேற்கின்றன. உலகின் 'நம்பர்-3', சாத்விக்சாய் ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி இந்தியா சார்பில் களமிறங்குகிறது. முதல் போட்டியில்சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை சந்திக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு. டி. ஏ.) சார்பில் பல்வேறு பிரிவுகளில், உலகின் பல்வேறு மீடியா இணைந்து தேர்வு செய்துவிருது வழங்கப்படுகிறது.. இதன்படி 80 சதவீத ஓட்டுகள் பெற்ற 2025 சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா 27, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வியாடெக்கிற்கு (போலந்து) அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா. 2025ல் ஆண்டுமுழுவதும், 75 போட்டியில் , 63 ல் வென்று உலகத் தரவரிசையில் 'நம்பர் -1' வீராங்கனையாக நீடித்தார்.4 தொடரில் கோப்பை வென்ற சபாலென்கா, 9ல் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட் லாம் அரங்கில் யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார்.
7வது நார்டிக் ஓபன் உஷூ சாம்பியன் ஷிப் சுவீடனின் ஸ்டாக் ஹோமில் ,இந்தியாவின் மெர்சி நகய்மாங், மெபங் லாம்கு என இருவரும் தலா 2 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். கைப்பற்றினர். ரஷித் சைப், குசும், ஒனிலு டெகா, கோமல் தங்கள் பிரிவுகளில் தங்கம்,.65 கிலோ பிரிவில் சுஜ்ஜால் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். இந்தியாவுக்கு 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. ஒட்டு மொத்தமாக இந்தியா 15 பதக்கங்கள் கைப்பற்றியது.
. பிரிமியர் கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.,) 19வது சீசன் 2026ல் இந்தியாவில், நடக்கவுள்ளது. சாம்பியன்' பெங்களூரு, சென்னை, . மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 173 பேர் தக்க வைக்கப்பட்டனர். நேற்று, அபுதாபியில் மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்ய 'மினி' ஏலம் நடந்தது. இதில் 369 பேர் (256 இந்தியர், 113 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர். சென்னை, கோல்கட்டா கேமரான் கிரீனை 26 வாங்க போட்டியிட்டன. சென்னை அணி ஒரு கட்டத்தில் ரூ. 23 கோடி வரை கேட்டது. கடைசியில் ரூ. 25.20 கோடி கொடுத்து கோல்கட்டா அணி தட்டிச் சென்றது. அதிக தொகைக்கு ஏலம் போன அன்னிய வீரர்களில் ஸ்டார்க்கை (ரூ.24.75 கோடி, ஆஸி.,) முந்தி முதலிடம் பிடித்தார் கிரீன்.'ஆல்-ரவுண்டர்’ பிரஷாந்த் வீர் 20, கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா 19, என இரு 'அன்கேப்ட்’ இளம் வீரர்களை கடும் போட்டியை சமாளித்து, நேற்றைய 'மினி' ஏலத்தில்தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது. இவர்களது அடிப்படை ஏலத் தொகை . ரூ.30 லட்சம் தான். இதிலிருந்து 47.3 மடங்கு அதிகம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே 18, பிரவிஸ் 22, இருப்பதால், இளம் படையாக 2026-இல். பங்கேற்கின்றனர்.
வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதன்பாட்மின்டன் போட்டியில் 86 வீரர், 86 வீராங்கனை என 172 பேர் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்று 2027, மே 3ல் துவங்குகிறது. 2028, ஏப்ரல் 30 வரை நடக்கும் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். 'ரோல் பால்' உலக கோப்பை தொடர் துபாயில் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 16-1 என சவுதி அரேபியா, 11-2 என பிரேசிலை வென்றது. இந்திய பெண்கள் அணி 25-0 என சவுதி அரேபியாவை வென்றது.
'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ், தொடர் வரும் டிச. 17-21ல் மும்பையில், நடக்கிறது. இதில் வீர் சோட்ரானி, அஞ்சலி செம்வால், சூரஜ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியா 'ஏ' அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடர் வரும் டிச. 16-18ல் மும்பை, வான்கடே மைதானத்தில்நடக்கவுள்ளது. சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், 'ஆமதாபாத்தில் 'கிரிகோ-ரோமன்'எடைப் பிரிவில் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தஅணியின் குல்தீப் மாலிக் (72 கிலோ), ரோகித் (87), நிதேஷ் (97), சேட்டன் (63) தங்கம் வென்றனர்.ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், துபாயில் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான இலங்கை அணி (238/8) 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை (235/10) வென்றது.
பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என தோல்வியடைந்தார்.சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து, 38வது இடத்துக்கு முன்னேறினார்.15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா சென்று உள்ள இங்கிலாந்து அணி, முதல் இரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணி அறிவிக்கப்பட்டது. முதலிரண்டு டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத (3 விக்கெட்) வேகப் பந்துவீச்சாளர் அட்கின் சன் 27, நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் 28,தேர்வானார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், சீனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் திவ்யா (587 புள்ளி) முதலிடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களை அஞ்சலி சவுத்ரி (582), மனு பாகர் (581), ரிதம் சங்வான் (579) கைப்பற்றினர். மனு பாகர் அடுத்து நடந்த பைனலில் 36 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே திவ்யா (32 புள்ளி), அஞ்சலி (28) வென்றனர். ரிதம் சங்வான் 4வது இடம் பிடித்தார்.மகாராஷ்டிரா சீனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஜூனியர்பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் தங்கம் வென்றார். பிரனவி, பாலக் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இந்திய ராணுவ அணி ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றது.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.சிறந்த வீராங்கனைக்கான கடந்த நவம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியலில் இந்தியாவின் ஷைபாலி வர்மா, யு.ஏ.இ., அணியின் ஈஷா ஓஜா, தாய்லாந்தின் திபாட்சா இடம் பெற்றனர்.சமீபத்திய உலக கோப்பை தொடரில், இந்தியாவின் பிரதிகா ராவல் காயத்தால் பாதியில் விலகினார். இவருக்கு மாற்றாக கள மிறங்கிய ஷைபாலி வர்மா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வெல்ல உதவினார். இவர், ஆட்ட நாயகி விருதையும் (87 ரன், 2 விக்கெட்) தட்டிச் சென்றார். சிறந்தவீரருக்கான விருதை தென் ஆப்ரிக்காவின் சைமன் ஹார்மர் வென்றார்.