மணி ஹெய்ஸ்ட்'உலகின் பிரபலமான வெப் சீரீஸ்,. உலகளவில் அதிகமான நபரால் பார்க்கப்பட்ட வெப் தொடரும் இது. இப்போது அடுத்த சீசனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்க சுரங்கம், தங்கம் கொள்ளை தொடர்பான கதை என கூறப்படுகிறது.மணி ஹெய்ஸ்ட்'டீசரில் 'புரட்சி ஒருபோதும் முடிவதில்லை' என வாசகம் இடம் பெற்றுள்ளது.
சமந்தா கதையின் நாயகியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'.ஆக் ஷன் பின்னணியில் சஸ்பென்ஸ் படமாக உருவாகி உள்ளது. படப் பணிகள் முடியாததால் ,நேற்று படம் வெளியாக வேண்டிய. ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூன் 19ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
'கட்டா குஸ்தி'விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம்.. இதே கூட்டணியில் தற்போது 'கட்டா குஸ்தி 2' உருவாகிறது. 'சம்பாதிக்கிறது மட்டும் வேலை இல்ல, வீட்டை சமாளிக்கிறதும் புல்டைம் வேலை தான்..' எனக் குறிப்பிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு ,ஜூலை 3ல் அறிவித்துள்ளனர்.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'MICHAEL', உலகம் முழுவதும் முதல் வார இறுதியில் $217.4 மில்லியன் வசூல் செய்து வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாக ,பிரம்மாண்ட சாதனையைப் படைத்த ஒரு பயோபிக் (Biopic) வகைத்திரைப்படம் .அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் மகன் ஜாபர் ஜாக்சன் நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது.
கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 'தி ஒடிசி '. டாம் ஹாலண்ட், அன்ன ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரித்திர பின்னணியில் உருவாகி ,சதிகாரர்களால் துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் மீண்டும் தன் ஆட்சியை பிடிப்பது மாதிரியான கதை. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஜூலை 17ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தயாரித்த 'தாய் கிழவி' படம் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஹிட்டானது. அடுத்து அதே இயக்குனர் படத்தில், கமல் தயாரிக்க, சிவ கார்த்திகேயன் 'சேயோன்' படத்தில் நடிப்பதாக , பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு துவங்கும் மூன்று மாதங்களில் படப்படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.என அறிவிக்கப்பட்டுள்ளது.
'அம்மா அறியான்' என்ற மலையாள ஆவணப்படம் ,கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.இது 1986ல் ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் உருவானது. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா கற்கும் மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிரின்ட்களை வைத்து '4கே' தரத்தில் புதுப்பித்து இப்போது திரையிட்டதில் பாராட்டை பெற்றது.
கார்த்திக் சுப்ப ராஜ்.'பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட' என இது வரை 9 படங்களை இயக்கியுள்ளார் .தன் படங்களில் இளைய ராஜாவின் பழைய பாடல்களை பயன் படுத்தி வந்த இவர், தன் 10வது படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். படத் தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகிறது.இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ், கனவு 10 ஆசீர்வாதம் 1540' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது இளையராஜாவின் 1540வது படம் இது.
மீராகதிரவன் இயக்கத்தில், இயக்குனர் கஸ்தூரி ராஜா நடித்திருக்கும் படம் 'ஹபீபி'. மே 28ல் ரிலீசாகிறது. பட விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், "நான் கஸ்தூரி ராஜா இயக்கிய படங்களை பார்த்ததில்லை. ஆனால், இப்படத்தில் அவர் நன்றாக நடித்து இருக்கிறார் என பாராட்டி பேசியுள்ளார்.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி யில் திரிஷ்யம் 1, 2வை தொடர்ந்து உருவாகி வரும் படம் 'திரிஷ்யம்3, ஏப்.,2ல் திரைக்கு வருவதாக அறி விக்கப்பட்டது. இதன் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் போர் பிரச்னையால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமானசூழலால் மே 21ல் மோகன்லால் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.