25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 23, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(22.05.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால்வழங்கப்பட்டமனுக்கள்மீதுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்குறித்துவேளாண்மைதுணைஇயக்குநர்மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர்(விவ)அவர்களால்எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மக்காச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க விவசாயிகள் தற்பொழுது உற்பத்தி செய்துள்ள மக்காச்சோளத்தினை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 2025-26ஆம் ஆண்டு பயிர் அறுவடை பரிசோதனை மூலம் மகசூல் கணக்கீடு செய்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் பயிர்காப்பீட்டுத்தொகை விடுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.விவசாயிகளுக்கு உழவர் பதிவேடு அட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இ-சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி பதிவு செய்யாத விவசாயிகளுக்கு விரைந்து உழவர் பதிவேடு அட்டை வழங்க வேளாண்மை இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் மா மரங்களின் பூக்கள் கருகிவிட்டதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து கூட்டாய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தனார்கள்.அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், உரத்தட்டுப்பாடை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உரங்களை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.உரத்தட்டுப்பாடை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரங்களை சிக்கனமாக பயன்படுத்தவும் அனைத்து வட்டாரங்களிலும் உரிய பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில்  வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

May 23, 2026

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் .

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.1.      விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை2.    இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை3.    ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை4.    கல்வி உதவித்தொகை5.    திருமண உதவித்தொகை6.    மகப்பேறு உதவித்தொகை7.    மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்8.    முதியோர் ஓய்வூதியம்மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்  சார்ந்தவர்கள்  2) 18 வயது முதல் 60 வயது  நிறைவு பெறாதவர்கள்  3) அமைப்பு  சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட  உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.           மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 22, 2026

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு ,ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்)  03.06.2026 முடிய இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in ஆகும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர்  (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள் (Machinist), கம்மியர் மோட்டார் வண்டி (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில்நுட்பவியலாளர் (R&AC Technician), கம்பியாள் (Wireman), பற்றவைப்பவர்  (Welder), உட்புற வடிவமைப்பு மற்றும் அலங்காரம் (Interior Design and Decoration), மேலும் தீயணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (Fire Technology and Industrial Safety Management) ஆகிய தொழிற்பிரிவு உள்ளன.இப்பிரிவில் சேருவதற்கு மட்டும் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், உடற்கூறு தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். (உயரம் 165செ.மீ, எடை 52 கிலோ, மார்பு விரிவதற்கு முன் 81 செ.மீ பின் 85 செ.மீ ). மேலும்,  Tata Technology மூலம் 4.0-வில் நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய தொழிற்பிரிவுகள் (Advanced CNC Machining Technician), (Mechanic Electric Vehicle), (Industrial Robotics & Digital Manufacturing)உள்ளன.அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் ஆண் / பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 9578855154 / 7010040810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 21, 2026

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் (19.05.2026) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டுத் தூய்மைப் பணித் தொடக்கம்: அதன் ஒரு பகுதியாக, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், மாநகராட்சி முழுவதும் தூய்மையைப் பேணுவதில் குடிமக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டும், 'தூய்மைத் திருவிழா-2026' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கூட்டுத் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். பொது சுகாதார வளாக ஆய்வு மற்றும் அறிவுரைகள்: அதனைத் தொடர்ந்து, சிவகாசி பேருந்து நிலையத்தில் தற்போது செயல்பட்டு வரும் பொது சுகாதார வளாகத்தின் (Public Restroom/Sanitation Complex) நிலை மற்றும் தூய்மைத் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாநகராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மை செய்து, பொதுமக்களின் சுகாதாரத்தினை உறுதி செய்ய வேண்டும் எனத் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். மதுபானக் கடை அகற்றம் உறுதி செய்தல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அரசால் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகாசி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்தார். இந்நிகழ்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன், அரசு அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

May 21, 2026

அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (20.05.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, பேருந்து நிலைய வளாகத்தின் தூய்மை நிலை, செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் தரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சுகாதார வளாகம் பராமரிப்பு மற்றும் பயணிகள் நலனுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சேவைகளை பெற தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், சுகாதாரமான உணவு தயாரிப்பு முறைகள், சமையலறை பராமரிப்பு, குடிநீர் வசதி, தூய்மை நிலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும், உணவு தயாரிப்பில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றிடவும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை தொடர்ந்து வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அம்மா உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 20, 2026

சூலக்கரை அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் . அவர்கள் தெரிவித்துள்ளார்.பள்ளியின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள்:இப்பள்ளியில் சேர்ந்து பயிலும் செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியர்களுக்குப் பின்வரும் கட்டணமில்லாச் சலுகைகளும் தங்கும் வசதிகளும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன: இலவசப் பொருட்கள்:1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாச் சீருடைகள், பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.விலையில்லா விடுதி வசதி:மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கேற்ப, இலவச உணவுடன் கூடிய தனித்தனிப் பாதுகாப்பான விடுதி வசதிகள் உள்ளன.கல்வி உதவித்தொகை:இங்கு பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அரசின் கல்வி உதவித்தொகை (Scholarship) தவறாமல் வழங்கப்படும்.நவீனக் கல்வி முறை:சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (High-Tech Computer Labs) வழியாக மாணவர்களுக்குப் பாடங்கள் எளிமையாகக் கற்பிக்கப்படுகின்றன.எனவே, செவித்திறன் குறையுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கூடுதல் விபரங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தலைமை ஆசிரியர், அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி,  சூலக்கரை, விருதுநகர் – 626 003 என்ற முகவரியிலோ அல்லது 94999 33454 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

May 19, 2026

மக்கள் விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  (18.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று கனிவுடன் பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, பொதுமக்களுக்காக அங்கு செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி, சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 19, 2026

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும், ‘தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007’-ன் (The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள முதியோர் இல்லங்கள் உடனடியாகத் தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. முதியோர் இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701

May 19, 2026

வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.மேற்கண்ட அனைத்துச் சேவைகளையும் மனுதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, எளிய முறையில் இலவசமாகச் செய்துகொள்ளத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பித் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார். 

May 19, 2026

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு.

விருதுநகர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 2026-27 ஆம் நிதியாண்டிற்குப் புதியதாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.50,000/- வைப்புத்தொகை இரசீது வழங்கப்படும். அதேபோல், மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.75,000/- வைப்புத்தொகை இரசீதாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு அக்குழந்தையின் வைப்புத்தொகை இரசீது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம். இ-சேவை மையங்களின் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாவன: குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் வயதுச் சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்றிதழ் (ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்), குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவையாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002" என்ற முகவரியிலோ அல்லது 04562-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 125 126

AD's



More News