25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Oct 21, 2025

யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் அபே சிங் வெற்றி .

. யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடர்அமெரிக்காவில்,  முதல் சுற்றில் இந்திய வீரர் அபே சிங், எகிப்தின் முகமது எல் ஷெர்பினியை எதிர்கொண்டார். ஒருமணி நேரம். 2 நிமிடம் நீடித்த போட்டியில் ,அபே சிங் 3-2 , (11-8, 4-11, 4-11, 11-6, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், நியூசிலாந்தின் பால் கோல் மோதினர். இதில் ரமித் டான்டன் 0-3  (5-11, 9-11, 7-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.

Oct 21, 2025

பெண்களுக்கான உலக கோப்பை  (50 ஓவர்) கிரிக்கெட்13வது சீசன்.

பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, இலங்கையில், 8 அணிகள் மொத்தம் பங்கேற்கின்றன. இது வரை நடந்த போட்டி (9), இங்கிலாந்து (9), முடிவில், ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்துநியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

Oct 21, 2025

மொராக்கோ ஜூனியர் உலக கால்பந்தில்  கோப்பை வென்றது.

 மொராக்கோ அணி ஜூனியர் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் ஆனது. பைனலில் 2-0 என, அர்ஜென்டினாவை வென்றது.சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன்,.சான்டியாகோவில் நடந்த பைனலில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. ஆடிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. .மொராக்கோ சார்பில் முகமது யாசிர் ஜாபிரி 2 கோல் (12,29வது நிமிடம்) அடித்தார். கானா அணிக்கு பின் (2009) ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆப்ரிக்க அணியானது மொராக்கோ.அர்ஜென்டினா (6 முறை), பிரேசில் (5)  அணிகள், இத் தொடரில் அதிக முறை கோப்பை வென்ற முதலிரண்டு இடத்தில் உள்ளன

Oct 18, 2025

சஹாஜா, மாயாவுக்கு சென்னை ஓபன் டென்னிசில் அனுமதி !

மூன்று ஆண்டுக்குப் பின் ,சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250 டென்னிஸ் தொடர் மீண்டும் சென்னையில் ,வரும் அக். 27 முதல் நவ. 2 வரை  நடக்க உள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார் இத்தொடரில் பங்கேற்க்கும் வீராங்கனைகளின்  ('ரேங்க்') இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. 

Oct 18, 2025

தான்வி  சர்மா உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்

 இந்தியாவின் தான்வி சர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,ஜப்பானின் சகி மட்சுமோடோ மோதினர். தான்வி 13-15, 15-9, 15-10 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் தான்வி.தவிர இவர், 17 ஆண்டுகளுக்கு பின் இத் தொடரில் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனையாகிறார்.  இந்தியாவின் செய்னா நேவல் கடைசியாக 2008ல் புனேயில் நடந்த தொடரில் தங்கம் வென்றிருந்தார். 

Oct 18, 2025

ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி பங்கேற்க தகுதி பெற்றது!

ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட) 2026ல் சீனாவில் (ஏப்.30-மே 17) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் நடந்தன. '' பிரிவில் நேற்று இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின..இந்திய அணி  முதல் பாதியில்என  0-1 பின்தங்கியது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கால்பந்து தொடரில் 'ஜி' பிரிவில் முதலிடம் பிடித்த  இந்திய  அணி (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) பங்கேற்க தகுதி பெற்றது. 

Oct 18, 2025

பெண்கள்  கிரிக்கெட் உலக கோப்பையில் தென் ஆப்ரிக்கா வெற்றி !

பெண்கள் உலக கோப்பை கொழும்புவில் நேற்று நடந்த (50 ஓவர்) லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி 12 ஓவரில், 46/2 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின், 20 ஓவர் போட்டியாக ,விஷ்மி (34) கைகொடுக்க இலங்கை அணி 20 ஓவரில் 120/7 ரன் எடுத்தது.  தென் ஆப்ரிக்க அணி 14.5 ஓவரில் 125/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Oct 18, 2025

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா  அணி  பைனலில் வெற்றி !

 சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் ,மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன .கடைசி லீக் போட்டியில்  நேற்று இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். முடிவில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில்'வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 'டிரா' (1 தோல்வி) 1 செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறிய  இந்திய அணி ,இன்று நடக்கும் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Oct 17, 2025

ஒவ்வொரு மாதமும் சர்வதேச போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைக்கு ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.

இந்தியாவின் அபிஷேக் சர்மா சிறந்த வீரராக தேர்வானார்.இந்தியாவின் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஜிம்பாப் வேயின் பிரையன் பென்னட் கடந்த செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுருக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக அபிஷேக் தேர்வானார். கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து (314 ரன், சராசரி 44.85, 'ஸ்டி ரைக் ரேட்' 200.00) தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக்.இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாசிறந்த வீராங்கனைக்கான விருது.தென் ஆப்ரிக்காவின் தஸ் மின் பிரிட்ஸ் ,சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மந்தனா, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கடந்த மாதம் விளையாடிய 4 ஒருநாள் போட்டியில், 2 சதம் உட்பட 308 ரன் குவித்தார் (சராசரி 77.00, 'ஸ்டிரைக் ரேட்' 135.68) மந்தனா.

Oct 17, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள்.

 உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர், அசாமின் கவுகாத்தியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் லி யுவான் சன் மோதினர்.தான்வி 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஞான தத்து, அமெரிக்காவின்காரெட்டான் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர். ஞானதத்து 15-12, 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா  ஜோடி ,கலப்பு  இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் 12-15, 15-11, 15-12 என்ற கணக்கில் பிரான்சின் திபோட்ஸ் கார்டன், அகதே குவேஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். .

1 2 ... 93 94 95 96 97 98 99 ... 170 171

AD's



More News