25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சர்வதேச செய்திகள்

Jun 10, 2026

அமெரிக்காவில்.....

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆண்டுக்கான அகதிகள் அனுமதி உச்சவரம்பை கூடுதலாக 10,000 பேருக்கு உயர்த்த அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்கானர் (Afrikaner) இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த இனத்தவர் இனவெறி மற்றும் வன்முறை அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகக் கூறி, இந்த அவசர கால நடவடிக்கையை அமெரிக்க அரசு  எடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த 7,500 என்ற உச்சவரம்பு தற்போது 17,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Jun 09, 2026

ஓமன் சுல்தானுக்கு பயமில்லை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய திருப்பம்! ஓமன் நாட்டின் சுல்தான், ஈரான் உடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளைப்பெருமளவில்அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வஅவசரச்சட்டத்தில்(ExecutiveDecree) கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்குப் பணியாமல், ஓமன் தனது அண்டை நாடான ஈரானுடன் கப்பல் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் வர்த்தக முதலீடுகளைப் பலப்படுத்த இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை விஷயத்தில் ஏற்கனவே சர்வதேச பதற்றம் நிலவி வரும் சூழலில், ஓமன் சுல்தானின் இந்த அதிரடி உத்தரவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

AD's



More News