பூமியிலிருந்து 403 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது WASP-132 இளஞ்சிவப்பு நட்சத்திரம். சமீபத்தில் விஞ்ஞானிகள் இதை சுற்றி வரும்இரண்டு கோள்களை கண்டறிந்து உள்ளனர். அவற்றில் ஒரு கோளான WASP-132c நட்சத்திரத்தை சுற்ற, 24 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மற்றொன்றான WASP - 132d ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
வெள்ளைச் சாக்லெட்டுகளில், சாக்லெட்டின் மூலப்பொருளான கொக்கோ விதைகளில் இருந்துசெய்யப்படும் நொதித்தல் முறையை நீக்கி விடுகிறார்கள். எனவே இது சாக்லெட்டின் உண்மையான சுவையை பெறுவதில்லை.வெள்ளை சாக்லெட்டுகளில் பால், சர்க்கரை, கொக்கோ வெண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். கொக்கோ விதைகளில் இருந்துஎடுக்கப்படும் ஒரு வித கொழுப்புப் பொருளே கொக்கோ வெண்ணெய் எனப்படுகிறது. சில நேரங்களில் கொக்கோ வெண்ணெய்க்கு பதிலாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட காய்கறி எண்ணெய் சேர்க்கப்படுவதும் உண்டு. 20 சதவீத அளவில் கொக்கோ வெண்ணெய் சேர்க்கப்பட்டு, வெள்ளை சாக்லெட் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது.
இலையின் நிறங்களுக்கு காரணம் ,இலைகளில்குளோரோபில், கரோட்டின், அந்தோசயனின் நிறமிகள் உள்ளன.. அனைத்து தாவரங்களும் குளோரோபில் (சூரிய ஒளியை உறிஞ்சுதல்) மூலமே உணவு தயாரிக்கின்றன . பொதுவாக தாவரங்கள் பச்சை நிறத்தில் காணப்படுவது, இதில் பச்சை நிறம் அதிகம் இருப்பதால் தான். இலையுதிர் காலம், பகல் வெளிச்சம், வெப்பநிலை குறைதல் உள்ளிட்ட சூழல்களில் குளோரோபில் மறையும். இதனால் ஏற்கனவே இலையில் இருக்கும் கரோட்டின் நிறமியால் மஞ்சள், ஆரஞ்சு, அந்தோசயனின் நிறமியால் சிவப்பு, பழுப்பு நிறங்களில் இலைகள் காணப்படும்.
புதுப்பிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள, இது நவீன பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, அதே நேரத்தில் பழைய உலக ராஜ்புதனாவின் அழகு, வசீகரம் மற்றும் மாயாஜாலத்திற்கு சான்றாக உள்ளது.பள்ளத்தாக்கு மற்றும் டெல்வாரா கிராமத்தின் காட்சிகளுடன் ஒரு கட்டளையிடும் நிலையை வகிக்கும்RAAS தேவிகர், அலங்கார பாணிகள் மற்றும் அமைதியான நிலப்பரப்பு தோட்டங்களின் வரிசையைக் காட்டுகிறது. குறைந்தபட்ச உட்புறங்கள் மெருகூட்டப்பட்டவை மற்றும் வசதியானவை, பண்டைய, அலங்கரிக்கப்பட்ட பின்னணியை அழகாக இணைக்கின்றன.மார்வாரி குதிரை சுவரோவியங்கள், பிரதிபலித்த முன் அறைகள், முற்றங்கள், வளைவுகள், கோபுரங்கள், ஊஞ்சல்கள், பூக்களின் பளிங்கு கிண்ணங்கள் மற்றும் இரவு வாருங்கள், ஆயிரம் மெழுகுவர்த்திகள் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த உலகத்திற்குள் நுழையுங்கள்.RAAS தேவிகர் ஒரு அமைதியான சோலையாகும், இது உங்களை நிம்மதியாக ஓய்வெடுக்கவும், நீச்சல் குளம், சூடான தொட்டி, தோட்டங்கள், உடற்பயிற்சி மையம், ஸ்பா மற்றும் மகிழ்ச்சிகரமான காட்சிகளை அனுபவிக்கவும் அனுமதிக்கிறதுஅரண்மனைக்கு அப்பால் நீங்கள் சுற்றிப் பார்க்கத் தயாராக இருக்கும்போது,கிடைக்கக்கூடிய அற்புதமான செயல்பாடுகளை உங்களுக்கு வழங்க, நாள் முழுவதும் பயணத் திட்டங்களாக வழங்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். டெல்வாராவில் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்கவும், ஹோட்டல் வாயில்களிலிருந்து நடைப்பயணங்களை அனுபவிக்கவும், உதய்பூர் நகர அரண்மனையைப் பார்வையிடவும் அல்லது பல கண்கவர் கோயில்களில் ஒன்றில் புனித யாத்திரை மேற்கொள்ளவும்.ஆரவல்லி மலைத்தொடரில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள RAAS தேவிகர், டெல்வாரா கிராமத்தை நோக்கி அமைந்துள்ளது. இதன் கட்டுமானம் 1760 ஆம் ஆண்டு, இரண்டாம் ராஜ்ராணா சஜ்ஜா சிங் ஆட்சியின் போது நிறைவடைந்தது. இந்த அரண்மனை முதலில் உள்ளூரில் வெட்டியெடுக்கப்பட்ட பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது, இந்த நடைமுறை அதன் மறுசீரமைப்பின் போது மீண்டும் பின்பற்றப்பட்டது.முன்னர் டெல்வாரா கோட்டை அரண்மனை என்று அழைக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் தோற்றம்1760 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்பே உள்ளது. மேவாரின் புகழ்பெற்ற மகாராணா பிரதாப்பிற்கு அவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக,1576 ஆம் ஆண்டு ஹால்டிகாட்டி போருக்குப் பிறகு டெல்வாரா சமஸ்தானம் ராஜ்ராணா சஜ்ஜா சிங் மற்றும் அவரது சகோதரர் அஜ்ஜா சிங்கிற்கு பரிசாக வழங்கப்பட்டது.இன்று காணப்படுவது போல், அரண்மனை கோட்டை, விசுவாசமான நன்கொடையாளர்களுக்கு சான்றாகும். நவீன யுகத்தின் வருகையுடன், இது இப்பகுதியில் மிகவும் கண்கவர் ஆடம்பர பயண இடங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. ஹோட்டலின் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் 750 பேர் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக,1999 ஆம் ஆண்டில், தேவிகர் அதன் கதவுகளை மீண்டும் திறந்தது, பார்வையாளர்களுக்கு புதிய உலக வசதிகளையும் பழைய உலக வசீகரத்தையும் கலந்த கலவையை வழங்கியது.
“ Valley of flowers”உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை மடியில், 3,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, பூக்களின் பள்ளத்தாக்கு. இயற்கையின் அற்புத களஞ்சியமாக விளங்குகிறது. யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, பிரிமுலா, ஆர்க்கிட், அனிமோன் போன்ற மலர்கள் வெவ்வேறு நிறங்களில் பூத்து, வண்ண ஒவியம் போல காட்சியளிக்கின்றன. இது சுற்றுலா பயணியருக்கு கண் கொள்ளாகாட்சியாக அமைகிறது. பயணியர் மனதை கொள்ளை கொள்ளும் ,மஞ்சள், இளஞ்சிவப்பு, வெண்மை நிறங்களில் ஜொலிக்கும் அல்பைன் மலர்கள், அரிய மூலிகைகளும் இங்கு செழித்து வளர்கின்றன. பசுமை புல்வெளியும், குளிர்ந்த நீரோடைகளும் ,பனிமூடியமலைச்சிகரங்களுக்கு மத்தியில், இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. இங்கு, பனிச்சிறுத்தை, மஸ்க்மான், இமாலய கரடி போன்ற அரிய விலங்குகள் பரவசப்படுத்துகின்றன. பறவைகள் பாடும்இனிய ஒலியும், மலைகளில் எதிரொலிக்கும்காற்றின் மென்மையும் அமைதியை தேடுவோருக்கு ஆறுதல் தருகின்றன.இந்தப் பள்ளத்தாக்கை அடைய, நந்தா தேவி உயிர்க்கோள மையத்தைக் கடந்து, கரடுமுரடான பாதைகளில் செல்ல சாகச விரும்பிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தரும். இங்கு புஷ்பவாடி என்ற கிராமத்தில் தங்கி, உள்ளூர் மக்களின் எளிய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். மின்சார வசதி குறைவு என்பதால், இயற்கையுடன் முழுமையாக இணைய முடியும். மழைக்காலத்தில், மூடுபனி, மேகங்களுக்கு மத்தியில், இந்தப் பள்ளத்தாக்கு மாயாஜாலமாக மாறும். பயணியர் இயற்கை அழகை ரசிக்கவும், தியானத்துக்கான அமைதி சூழலை அனுபவிக்கவும் இங்கு வருகின்றனர்.இந்த பள்ளத்தாக்கு, இந்தியாவின் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்றாக உள்ளது. உலகெங்கும் உள்ள பயணியரை ஈர்க்கிறது. இங்கு, ஒவ்வொரு பருவமும், வெவ்வேறு அழகை வெளிப்படுத்தும். கோடை காலத்தில் பசுமை நிறைந்து, மலர்கள் மலர, குளிர்காலத்தில் பனி மூடி கனவுலகமாக மாறும்
அண்மையில்' நிசார் 'செயற்கைக்கோளை வெற்றிகர மாக விண்ணில் செலுத் தியது இஸ்ரோ. அடுத்து, அமெரிக்கா உருவாக் கிய, 6,500 கிலோ எடையுள்ள 'ப்ளூபேர்ட்' (BlueBird) என்ற செயற் கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயா ராகிறது.அதிநவீன 'எல்.வி. எம்.3எம்5' ராக்கெட் மூலம் இந்தச் செயற் கைக்கோளை ஏவ இஸ்ரோவிஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதனால்,சர்வதேச விண்வெளிச் சந்தையில் இஸ்ரோவின் நம்பகத் தன்மை அதிகரிக்கும்.'ப்ளூபேர்ட்' செயற் கைக்கோளில், புரட்சிக ரமான தொழில்நுட்பம் உள்ளது.எந்தவொரு சிறப்பு கருவி யும் இல்லாமல், சாதாரண மொபைல் போன்களுக்கு, செயற்கைக் கோளிலிருந்தே, நேரடி யாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு.'ப்ளூபேர்டின்' 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண் டமான ஆன்டெனா, தொலைதூரக் கிரா மங்களில் இருப்போரின் மொபைலுக்கும் நேரடியாக இணைய சேவையை வழங்கும்.அமெரிக்காவின் இவ்வளவு பெரிய, முக்கியமான செயற் கைக்கோளை இஸ்ரோ ஏவுவது, இரு நாடுக ளுக்கும் இடையேயான விண்வெளி ஒத்துழைப் பை வலுப்படுத்தும்.இது இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு ஒருசான்றாகஇருப்பதோடு,உலக விண்வெளித்தொழில்நுட்பசந்தையில், இந்தியாவின் முக்கியத் துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.
சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை. ஷாம்பு இல்லாத காலத்தில் ,தலைமுடிகள் கொட்டவில்லை.மினரல் வாட்டர் இல்லாத காலத்தில், சிறுநீரில் கல் வரவில்லை.பாலிதீன் பொருட்கள் இல்லாத காலத்தில், புற்றுநோய் வரவில்லை.அயோடின் உப்பு இல்லாத காலத்தில், தைராய்டு வரவில்லை.ரிபைன்ட் பாமாயில் இல்லாத காலத்தில் ,மாரடைப்பு வரவில்லை.பிராய்லர் கோழி இல்லாத காலத்தில், பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை.மிக்சி, கிரைண்டர், வாசிங்மெஷின் இல்லாத காலத்தில், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கவில்லை.பேஸ்ட் இல்லாத காலத்தில், பல் சம்பந்தமான நோய் வரவில்லைநாப்கின் வருவதற்கு முன் கர்பப்பை நோய் எதுவும் வரவில்லைசோப்பு இல்லாத காலத்தில், தோல் நோய் எதுவும் வரவில்லை.ஆங்கில வழி மருந்துகள் வருவதற்கு முன், நோய்கள் அதிகம் வரவில்லை.தாய்மொழி மூலம் கல்வி கற்க்கும்வரை சிந்தனை திறன் குறையவில் லை.இதற்கு எல்லாம் காரணம் வியாபார நோக்கம் மட்டுமே!
சில நேரம் வெள்ளை துணியில் அழுக்கு அதிகமாக இருக்கும் எவ்வளவு சோப்பு போட்டாலும் போகாது இது ஈஸியாக அழுக்கு போக நன்றாக சுடு தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கொஞ்சம் வினிகரையும் ஊற்றி ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து சோப்பு போட்டு துவைத்தால் ஈஸியாக அழுக்கு போய் துணி வெள்ளையாக பளிச்சென மின்னும் பழுப்பு நிறமும் போய்விடும் இதை வெள்ளை துணிக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.கிட்சன், பாத்ரூம் பளபளக்க...வீட்டில் உள்ள சிங்க் குழாய்கள், பாத்ரூம் குழாய்களில் எலுமிச்சை சாற்றை தடவி ஊற வைத்து தேய்த்தால் எளிதில் அழுக்குகள் நீங்கி குழாய்கள் பளபளக்கும்.1 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யில், அரை மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின் அதை பருத்தி துணி கொண்டு பர்னிச்சர்களை துடையுங்கள். இது படிந்திருக்கும் கறைகளை நீக்கி கரையான் தொல்லைகள் இல்லாமல் பராமரிக்கும்.
தகவல் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள்,. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத்துறையில் கோலோச்சி வரும்நிலையில் போட்டியை சமாளிக்க ஏ.ஐ. துறையை மேம்படுத்தும் கட்டாயத்தில் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏ.ஐ. பிரிவுக்கான துணை தலைவராக இருந்த ஜான் ஜியேந்திரா வெளியேறியதை தொடர்ந்து புதிய துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ,பெங்களூருவை சேர்ந்த இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார்..
உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக தெரியவந்து உள்ளது. பகலில் தூங்குவது. உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய 'மெண்டலியன் ரேண்டமை சேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது.வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க பகல் நேர குட்டி தூக்கம், உதவுகிறது என்று தெரியவந்தது. இதே போல 'டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் ஆய்வு நடந்தது. இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம்போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில்ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாககண்டறியப்பட்டது. இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி ஆராய்ச்சியாளர்கள் ,பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று தெரிவித்து உள்ளனர்.