புற்றுநோய்க்கான இரண்டு முக்கிய மருந்துகள் ட்ரா மெடனிப், ராபாமை சின். இரண்டையும் கலந்து உருவாக்கப் பட்ட புதிய மருந்தை எலிகள் மீது விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்த னர். எலிகளின் ஆயுள் 30 சதவீதம் அதிகரித்தது. மனிதர்களுக்கு இது உதவுமா என்ற கோணத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
நமது ஆடைகளில் பொத்தான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ,சிறப்பிடம் பிடிக்கின்றன. அந்த வகையில் பொத்தான்கள் கடந்து வந்த வரலாறு பொத்தான்களின் பயன்பாடு கி.மு. 300-ம் ஆண்டுகளில் இருந்து தொடங்கிவிட்டது. 13-ம் நூற்றாண்டுவரை துளை இல்லாத பொத்தான்களே பயன் படுத்தப்பட்டு வந்தன.பொத்தான்கள் பணக்கார மக்கள் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மக்களுடைய பயன் பாட்டுக்கும் வந்தது.பிரான்சிஸ் என்ற மன்னன் தனது சட்டையில் 13 ஆயிரத்து 600 தங்க பொத்தான்கள்அடங்கிய ஆடை உடுத்தியதாக குறிப்பு உள்ளது.படைவீரர்களின் சீருடையில் அரசன், அரசியின் உருவம் இடம் பெற்ற பொத்தான்கள் இருந்தன.தொழிற்புரட்சிக்கு பின்னர் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் பொத்தான்கள் தயாரிக்கப்பட்டன. முதன் முதலில் பொத்தான்களை இங்கிலாந்தைசேர்ந்த மேத்யூ பவுல்டன் என்பவர் தான் இயந்திரத்தில் தயாரித்தார்.
"காடுகளில் வேட்டையாடி உணவு தேடிய மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக மனிதனுக்கு உதவியாக சில விலங்குகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதில், மனிதனையும், மனிதனின் உடைமைகளையும் ஊர் ஊராக தூக்கி சுமந்த கழுதைகளின் வரலாறு மிகப்பழமையானது. கழுதைகள் மதிப்பு மிக்க ஒரு விலங்காக இருந்தன .பண்டைய காலத்து நாகரிகங்களில் குதிரைகளை பழக்கும் முன்பு, நாட்டின்ஆட்சியாளர்கள் கழுதைகள் மீது அமர்ந்து நகர் வலம் வந்தனர் .கழுதைகள் பூட்டிய வண்டிகளில் பயணித்தனர். கழுதைகள்இந்த உலகத்தில் எப்படி வந்தன என்று அதன் மரபணுவை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிசெய்தனர். கி.மு.3000-ம் ஆண்டில் இருந்தே கழுதைகள் மனிதனுடன் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றன. இன்றைய கழுதைகள் ஆப்பிரிக்க கழுதையின் இரண்டு கிளை இனங்களில் ஒன்றான ஈக்வஸ் ஆப்ரிகானஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த நுபியன் கழுதை வகை ஆகும் என கண்ட றிந்தனர்.. பண்டைய எகிப்திய மன்னருடன் புதைக்கப்பட்ட கழுதைகளின் எலும்புக்கூடு புதை படிமத்தில் இருந்து இது தெரியவந்தது. கழுதையின் உழைப்பு இன்றும் தொடர்வதற்கு ஆதாரமாக சகாரா பாலைவனம் வழியாக பயணிக்கும் நாடோடி மக்கள் இன்றும் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர். கி.மு. 200-ம் ஆண்டு முதலே ரோமானியராணுவத்தால் ,ராணுவத்திற்கு மிக முக்கியமான வேலை செய்யும் விலங்குகளாக ,கனரக பீரங்கி வண்டிகளைஇழுக்க கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் ரோமானிய ராணுவத்தில் அரை மில்லியன் கழுதைகள் பணியாற்றின என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி கிராமங்களில் சுமை இழுக்க கழுதைகள் இன்றும் கூட அனைத்து நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது.
நீதா அம்பானியின் ரூ.12 கோடி மதிப்புள்ள பேண்டம் ஆடம்பரத்தை மறுவரையறை செய்கிறது. நீதா அம்பானி, மீண்டும் ஒருமுறை ஆடம்பரத்தில் புதிய தரங்களை அமைத்துள்ளார்சமீபத்தில் தனது உயரடுக்கு கார் சேகரிப்பில்₹12 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒரு அற்புதமான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்VIII நீட்டிக்கப்பட்ட வீல்பேஸைச் சேர்த்துள்ளார்.2023 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி பரிசளித்த கல்லினன் பிளாக் பேட்ஜுக்குப் பிறகு அவரது இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் - இந்த தனிப் பயனாக்கப்பட்ட பாண்டம் அதன் தனித்துவமான இரண்டுதொனி இளஞ்சிவப்பு பூச்சுடன் கவனத்தை ஈர்க்கிறது.பாதி வெல்வெட் ஆர்க்கிட்டில் ஜொலிக்கிறது, அதே நேரத்தில் கீழ் உடல் ரோஸ் குவார்ட்ஸில் ஜொலிக்கிறது, தங்க முலாம் பூசப்பட்ட ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி சின்னத்துடன் மேலே உள்ளது.உள்ளே, நிதா அம்பானியின் முதலெழுத்துக்களான“NMA” ஹெட்ரெஸ்ட்களில் நுட்பமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளன, மேலும் வாகனம் உண்மையிலேயே தனிப்பட்ட தொடுதலுக்காக தனிப்பயன் டின்னர் பிளேட் சக்கரங்களைக் கொண்டுள்ளது.571bhp ஆற்றலை வழங்கும்6.75 லிட்டர் ட்வின்டர்போV12 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது,PhantomVIII ரோல்ஸ் ராய்ஸின் கையொப்ப சக்தி மற்றும் ஒப்பிடமுடியாத ஆறுதலின் கலவையை வழங்குகிறது.இந்த காரின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் அரிய நிறம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது, 2025 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்படும் சொகுசு கார்களில் ஒன்றாக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.திகைப்பூட்டும் புதிய சேர்க்கையின் மூலம்,முழுவதும் நேர்த்தி, பிரத்யேகத்தன்மை மற்றும் சுய வெளிப்பாடு நீதா அம்பானியின் தனது ஆடம்பர பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
தென் கிழக்கு சீனாவில் ஆற்றில் வாழும் ஒரு புதிய மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.4 அங்குல நீளமுடைய இந்த மீன்கள் பெரிய கண்களும், மூன்று வரிசை பற்களும், பளபளப்பான வெள்ளி நிறச் செதில்களும் கொண்டுள்ளன. இதற்கு 'ஹைனானியா மின்ஜெங்கி என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், கடக ராசி மண்டலத்தில்உள்ளது OJ 287 கேலக்ஸி. இதன் நடுப்பகுதியில் மிகப் பெரிய கருத்துளைகள் இருப்பதை ரேடியோ தொலைநோக்கியான ரேடியோ ஆஸ்ட்ரான் உதவியுடன் விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 86 வயது தொழிலதிபர் ஒருவர் பிஜி நாட்டில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறார். 13 நகைக்கடைகள்,6 ரெஸ்டாரண்ட்,4 சூப்பர் மார்க்கெட் உள்பட பல தொழில்களை நடத்தி வரும் அவர் எந்த ஆடம்பரமும் இன்றி வாடகை கார்‛ஊபர்' ஓட்டி வருகிறார். கார் ஓட்டுவதன் பின்னணி குறித்து இந்திய தொழில் முனைவோர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் 1,100 கடல் மைல் தொலைவில் பிஜி (Fiji) என்ற தீவு நாடு அமைந்துள்ளது. சமீபத்தில் நம் நாட்டை சேர்ந்த தொழில் முனைவோர் நவ் ஷா பிஜி நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் ‛ஊபர்' வாடகை காரில் பயணித்தார். அப்போது அவரது காரை முதியவர் ஒருவர் ஓட்டினார்.இதையடுத்து நவ் ஷா அவரிடம் பேச தொடங்கினார்.‛‛கார் ஓட்டி கிடைக்கும் வருமானத்தை தினசரி செலவுக்காக பயன்படுத்துகிறீர்களா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு முதியவர் சொன்ன பதிலை கேட்டு அவர் வியப்படைந்தார். அதாவது அந்த முதியவர் நான் ஒரு தொழிலதிபர். ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறேன் என்று சொல்ல நவ்ஷாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுபற்றி அந்த தொழிலதிபர்,‛‛நான் ஒரு தொழிலதிபர். எனது கம்பெனி175 மில்லியன் டாலர் வருமானம்(இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி) ஈட்டுகிறது. நான் கடந்த 10 ஆண்டுகளாக 24 பெண் குழந்தைகளுக்கான படிப்புக்கு உதவி செய்து வருகிறேன். ‛ஊபர்' ஓட்டி கிடைக்கும் பணத்தை வைத்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறேன். எனக்கு3 மகள்கள். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கினேன். தற்போது அவர்கள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பிற பெண்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவ வேண்டும் என்ற முடிவில் இதனை செய்து வருகிறேன்.எனக்கு சொந்தமாக13 நகைக்கடைகளை நடத்தி வருகிறோம்.6 ரெஸ்டாரண்ட், ஒரு பிஜி டைம்ஸ் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறோம்.4 சூப்பர் மார்க்கெட் உள்ளது. ஹோல்சேல் மற்றும் ரீடெயில் பெர்பியூம், மதுபானம் விற்பனையை நடத்தி வருகிறோம். இந்த தொழிலை நான் தொடங்கவில்லை. எனது தந்தை1929ல் தொடங்கினார்.அவர் இந்தியாவில் இருந்து வந்து5 பவுண்ட் வைத்து தொழில் தொடங்கினார். அதற்கு முன்பாக அவர் ஒரு கம்பெனியில் பணியாற்றினார். ஆண்டுக்கு15 பவுண்ட் சம்பளம் பெற்றார். அதில்5 பவுண்ட்டை சேமித்து தொழில் தொடங்கினார். அவர் தான் இந்த தொழில்களை தொடங்கினார்'' என்று கூறி நெகிழ வைத்தார்.இதையடுத்து நவ் ஷா, இப்போது20,30 வயதில் உள்ள இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அந்த தொழிலதிபர்,‛‛முதலில் நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருங்கள். அதன்பிறகு மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்க முடியும்'' என்று கூறினார். கார் ஓட்டியபடி அந்த தொழிலதிபர் சொன்னதை நவ் ஷா தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் பலரும் பிஜி நாட்டின் இந்திய வம்சாவளி தொழிலதிபரை பாராட்டி வருகின்றனர்.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹5,550 கோடிEBITDA ஈட்டியுள்ளது. மேலும், அது கடந்தாண்டு உடன் ஒப்பிடும்போது27% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் துறைகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.2026 நிதியாண்டின் முதல் பாதியில், உள்நாட்டுத் துறைமுகங்கள் அதிகபட்சமாக 74.2% EBITDAவை பதிவு செய்துள்ளது. அதேபோல பன்னாட்டுத் துறைமுக ஆபரேஷனும் ₹2,050 கோடி வருவாயையும், ₹466 கோடி EBITDAவை எட்டியுள்ளன. இது வாழ்நாள் சாதனையாகும்.லாஜிஸ்டிக்ஸ் பிரிவில், 2026 நிதியாண்டின் முதல் பாதியில் ₹2,224 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 92% வளர்ச்சியாகும். கடல்சார் துறையில்,2026 நிதியாண்டின் முதல் பாதியில்₹1,182 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட213% அதிகமாகும்.. புதிய கப்பல்கள் வாங்கியதே இந்த வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஃபின்ச் மற்றும் எஸ் & பி குளோபல் APSEZஇன் ரேட்டிங்கை மேம்படுத்தி வழங்கியுள்ளது. Fitch Ratings "நெகட்டிவ்" என்பதில் இருந்து "ஸ்டேபிள்" என மாற்றியுள்ளதுடன்,"BBB-" மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.S&PGlobal, சர்வதேச போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனங்களில் APSEZஐ முதல் 5% பட்டியலில் அங்கீகரித்துள்ளது.APSEZ இன் ஒருங்கிணைந்த போக்குவரத்துப் பயன்பாட்டு லாபகரமான வளர்ச்சி ஒரு சான்றாக இருப்பதாக அதன் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஸ்வினி குப்தா தெரிவித்தார்.APSEZ கடந்த செப்டம்பர்30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டு முடிவுகளை அறிவித்திருந்தது. அதில் தான் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அஸ்வினி குப்தா மேலும் கூறுகையில்,"லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடல்சார் வணிகங்கள் தொடர்ந்து அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன, இது எங்கள் சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த லாபம் எங்கள் செயல்பாட்டிற்கான ஒரு சான்று. இதுவரை இல்லாதEBITDAஐ பதிவு செய்து சாதனை படைத்துள்ளோம்.12 லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள்,3.1 மில்லியன் சதுர அடி கிடங்குகள், விரிவடைந்து வரும் சரக்கு சேவை போக்குவரத்து என எங்கள் விஷனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இது சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த வீரராக எங்களை நிலைநிறுத்துகிறது" என்றார்.முந்திரா துறைமுகம் இந்தியா மரிடைம் விருதுகளில்"சிறந்த தனியார் துறைமுக மற்றும் ஆண்டின் சிறந்த கொள்கலன் முனையம்" விருதை வென்றது. இந்தியா மரிடைம் வாரத்தில்"கடல்சார் சாதனையாளர்கள்" பிரிவில்"துறைமுக முன்னோடி"விருதைAPSEZ வென்றது. ஓஷன் ஸ்பார்க்கிள் நிறுவனத்திற்கு"மின்னிலக்க நௌகிக் டெக் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது"வழங்கப்பட்டது. தாமரா துறைமுகம் ஒடிசா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால்"மாசு கட்டுப்பாட்டு பாராட்டு விருது" பெற்றது. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் உச்சிமாநாட்டில்"சிறந்த துறைமுகச் சேவை வழங்கும் நிறுவனம்"மற்றும்"லாஜிஸ்டிக்ஸ் சாம்பியன்" விருதுகளை வென்றது. கங்காவரம் துறைமுகத்திற்கு"சுற்றுச்சூழல் பாதுகாப்பு" விருது, விழிஞ்சம் துறைமுகத்திற்கு"மாசுக்கட்டுப்பாட்டு இயந்திர உபகரணங்கள்" விருது மற்றும் தாமரா துறைமுகத்திற்கு "கழிவு குறைப்பு" விருதுகள் வழங்கப்பட்டன.. கோவா துறைமுகத்திற்கு Apex India Green Leaf Awards அமைப்பு "டயமண்ட் விருது" பெற்றது.
அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கெடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதிகபட்ச ஏலத்தொகை ஆக இந்த கெடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.. இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த கார் ஆடிA9 பச்சோந்தி. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இந்த காரின் உரிமையாளர் தொழிலதிபர் நிதா அம்பானி. இந்த காரில் வண்ணங்களை மாற்றும் மின்சார வண்ணப்பூச்சு பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் உலகில்11 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில்600 குதிரைத்திறன் கொண்ட4.0 லிட்டர்VS எஞ்சின் உள்ளது. இதன் கூரை மற்றும் ஜன்னல்கள் ஒரே அலகில் உள்ளன.