காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? -தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? - மின் விசிறி
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத் திரி. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்.
மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன? வயது அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை
வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன? - கனவு மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன? - சீட்டு கட்டு
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன? - தலை வகிடு. முதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்? – ஆர்மோனியம்.
உயரத்திலிருந்து விழுவான் ,அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன? - அருவி நீர். பச்சைக் கீரை சமைக்க உதவாது ,வழுக்க உதவும். அது என்ன? – பாசி.
என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன? - உளுந்து. .மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? - மண்புழு.
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு. தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்/-? தேங்காய்.
நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? - வெங்காயம் உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? - கடல் அலை