25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டம்  சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும். அரசு நிருவாகம் முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1956-இல் சட்டமன்றத்தில் ஆட்சிமொழிச்  சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 17.12.2025  முதல் 26.12.2025  வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.  இதன் ஒரு பகுதியாக  17.12.2025  ஆட்சிமொழிச் சட்டம் குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி சாத்தூர் நகராட்சி மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து  காவல்நிலையம் வழியாக  கடைவீதி வரை(காய்கறி சந்தை) வரை    நடைபெற்றது.

இப்பேரணியின் போது, ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளும், ஒட்டுவில்லைகளும் வழங்கப்பட்டன.இப்பேரணியில் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்      திருமதி ந.ஜோதிலெட்சுமி, சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட  200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News