துளசி செடி இருக்கும் இடத்தில் தீயசக்திகள் அண்டாது பசுவின் சாணம் பட்ட இடத்தில் தீயசக்திகள் நெருங்காது. ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்டமுடியாது. மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை கேட்டால் தீய சக்திகள் நெருங்காது. நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி இருப்பவரை தீயசக்திகள் அண்டாது. இரும்பு உலோகத்தை கையில் வைத்திருந்தால் தீயசக்திகள் அண்டாது.
நகைகளை ஒருபோதும் சமையல் அறையில் உள்ள அரிசி பருப்பு போன்ற அஞ்சறைப் பெட்டிகளில் வைக்க கூடாது.அடுப்பங்கறையில் அக்னி மூலையில் வைக்கும் தங்க நகைகள் ஒருபோதும் பெருகாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .அடுப்பங்கறையில் வைக்கும் நகைகள் விரைவில் அடகு கடைக்கு போகும் அல்லது திருடு போக வாய்ப்பு உள்ளது.அதேபோல் வடமேற்கு மூலையில் உள்ள அறையில் தங்க நகைகள் சேமித்து வைக்க கூடாது.
ஆணுக்கு வலது பக்கம் பெண் உட்கார கூடாது இடது பக்கம் தான் உட்கார வேண்டும் என்பது ஐதீகம். மணப்பந்தலிலும் பெண்கள் ஆணுக்கு இடது பக்கம் தான் உட்கார வேண்டும். பெண்ணின் வலது பாகமாக செயல்பட வேண்டியது ஆண் என்றும், ஆணின் இடது பாகமாக செயல்பட வேண்டியது பெண் என்றும் அர்த்தம். இந்த நம்பிக்கையை பலமளிப்பது இந்து மத சாஸ்திரத்தில் வலது பக்கம் ஆணும், இடது பக்கம் பெண்ணும் இருக்கின்ற அர்த்தநாரீஸ்வரர் ஆவர்.
1.கோவிலில்நமக்கு கொடுக்கப்படும் பூ மாலைகள், பூக்கள், துளசி, அன்னம் கொடுக்கப்படும் பிரசாதங்கள் நிர்மால்யம் என்று பெயர். அவற்றில் கடவுளின் சக்தி அதிகம் இருக்கும். அவைகள் வெறும் பூக்களோ உணவு பண்டங்களோ அல்ல. 2. பிரசாதங்களை வாங்கி கண்களில் ஒற்றி கொண்டு உணவாக இருந்தால் சாப்பிடலாம். பூவை தலையில் சூடி கொள்ளலாம். ஆனால் துளசியை தலையில் வைக்க கூடாது. மாலையை பூஜை அறையில் வைத்து பிறகு ஓடும் நீரில் விடலாம். 3.சிலர்வாசல் நிலைப்படியில் மேலே மாட்டுவார்கள் அந்த வாசலில் யார் வேண்டுமானாலும்நுழைவார்கள், வண்டி வாகனங்களுக்கு மாட்டினால், அந்த பூக்கள் சிதறிஅங்கெங்கே மற்ற வாகனங்களில் மிதிபட்டு சிதலம் அடையக்கூடும் இவைஇரண்டையும்தவிர்ப்பது நல்லது.
ஒருவர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டால், அவர்கள் செய்த கர்மா தான் அவர்களை காப்பாற்றியது என்று அர்த்தம். நமக்கு அதிக துன்பத்தை தருவது உயிர் சேதம்.அடுத்து பணம் திருடு போவது அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாறுவது, இவை இரண்டும் தான் மனிதனை அணு அணுவாக கொல்லும், மற்றவைகள் எல்லாம் நாளடைவில் மறந்து விடுவார்கள்.நாம் செய்த கர்மா தான், பண சேதத்தை ஏற்படுத்தி உயிர் சேதத்தை தடுக்கும். ஆனால் நம்மை ஏமாற்றியவர்களுக்கு பாவ புண்ணியத்தின் படி உயிர் சேதமோ அல்லது வேறு வகைகளில் ஏற்படுத்தி அவர்களை படுகுழியில் தள்ளும்.வருத்தப்படாமல் இருங்கள் பொறுத்தார் பூமி ஆள்வார்..!
வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும். கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது. வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும். விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும். முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது. மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (5.45-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும். குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும். .காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும். பால், தயிர், ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல் தரக் கூடாது.
சாப்பிட்ட பாத்திரங்களை உடளே கழுவாமல், ஒரேடியாக சேர்த்து மூலையில் குவித்து வைப்பது. வீட்டில் எங்காவது ஒரு மூலையில் குப்பை கிடப்பது; தண்ணீர் சொட்டு சொட்டாக வீணாக விழுவது. மாலை விளக்கேற்றும் நேரத்தில் சோகமாக இருப்பது, அழுகை சீரியல் பார்ப்பது அல்லது சத்தமாக திட்டுவது. கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பது அல்லது திட்டிக் கொண்டிருப்பது. பெற்றோர் குழந்தைகளை அடிப்பது அல்லது எப்போதும் குறை கூறி அழ வைப்பது. இரண்டு மூன்று நாட்களாக ஒரே துணியை அணிந்து, சுத்தமின்றி இருப்பது. அந்தி சாயும் நேரத்தில் வீடு இருளாக இருந்தும், பூஜை அறையில் விளக்கேற்றாமல் அல்லது லைட் போடாமல் இருப்பது.
நாம் பூஜை அறையில் மண், வெள்ளி, தாமிரம்,ஈயம், பித்தளை, செம்பு போன்ற உலோகங்கள் ஆன பொருட்களை பயன்படுத்தி தண்ணீர் (வைப்பதால் நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மன அமைதி அதிகரிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.நாம் பூஜை அறையில் வைத்த ‘தண்ணீரை " மறுநாள் காலையில் கூரையின் மீது ஊற்றுவதன் மூலம் துர்சக்திகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க பூஜை அறையில் வைத்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.இதனால் எதிர்மறை வீட்டைவிட்டு தினமும் அகலும் என்றும் நம்பப்படுகிறது.
இடது கண் துடித்தால் அவர்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.வலது கண் துடித்தால் இனிமேல் அவர்களது கனவு நினைவாக போகிறது என்று அர்த்தம்.பெண்கள் என்றால் இடது கண் முடித்தால் நற்செய்தியும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்தி வரும்.வலது கண்கள் நீண்ட நாட்களாக, நீண்ட நேரம் ,தொடர்ச்சியாக துடித்தால் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடலில் எதோ ஒருகண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளது என்றுஅர்த்தம்.
கோபுர நிழல் அல்லது கொடிமரத்தின் நிழல் நம் வீட்டு மனையின் மீது விழாதபடி வீடு கட்ட வேண்டும்.பெருமாள் கோயிலின் பின்புறம் சிவன். கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக் கூடாது.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை ,வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது மனை தோசத்தை சரி செய்யும்..தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க .ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில் வீடு கட்ட கூடாது.வீட்டின் வாசலில் அல்லது நில கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது..நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால், அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை; சந்தோசம் ஆரோக்கியம் கெட்டு விடும்.