சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கவேண்டும்.நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின்B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயிர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிகங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. அதிகப் பலன்களைப் பெற ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இந்த ஜூஸை பருகலாம்.
. உளுந்து 1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்ளவும்.பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேங்காய்பால் அல்லது பால் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். "சுவையான உளுந்து பால் ரெடி".இதனை குடித்து வருவதனால் உடல் சூட்டை தணிக்கும்.மலச்சிக்கல், வயிறு உப்புசம், மாதவிடாய், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்க உதவியாக இருக்கும்.
அமெரிக்க வேதியியல் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்.மேலும், இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடு படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நெல்லிக்காய் - தினமும் ஒன்று. பேரீச்சை பழம் - தினம் நான்குமுருங்கை கீரை - வாரம் 2 முறை பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml சுண்டைக்காய் - வாரம் 2 முறை முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும் மாதுளை, திராட்சை வாரம் 2 முறை ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4பீர்க்கங்காய் - வாரம் 2 முறை வைட்டமின் ஏ மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். சிவப்பு இறைச்சி, கோழி, மீன் ஆகியவை நல்ல இரும்புச்சத்து உள்ளவை.இரும்புச்சத்து நிறைந்த தானியங்கள்,பலப்படுத்தப்பட்ட தானியங்கள்.எள் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.
புடலங்காய் கூட்டு சாப்பிட்டால் செரிமாணம் சீராகும். மலச்சிக்கல் குறையும்புடலங்காயை சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து, வெயில்கால அலர்ஜி தீரும்.புடலங்காயை அரைத்துப் பேஸ்ட் போட்டால் சருமம் பளிச்சிடும். அலர்ஜி குறையும்.புடலங்காயை இரலில் சூப்பாக வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் கட்டுப்படும்.உடல் குளிர்ச்சி அதிகமாக இருக்கிறவர்கள் தினசரி சாப்பிடாமல் பத்து நாளைக்கு ஒரு முறை போதும்.
இருமல்,சளி போன்றவற்றிற்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது ஐந்து மிளகுடன் வெற்றிலையை மென்று சாப்பிட்டால் சளி நீங்கும். கடுகு எண்ணெயில் சூடு படுத்திய வெற்றிலையை மார்பில் தடவினால் சளி குறையும், ஏலக்காய் கிராம்பு மற்றும் லவங்கப் பட்டையுடன் வெற்றிலையை சேர்த்துகொதிக்க வைத்த வெற்றிலை கஷாயம் மார்பு சளியை வெளியேற்ற உதவும்.வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள்,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
பசலைக்கீரை - ரத்த அழுத்தத்தை குறைக்கும்.அன்னாசி பழம் - ஜூரண சக்தியை அதிகரிக்கும்.பீட்ரூட்- ரத்த சோகையை நீக்கும்.வல்லாரைக்கீரை - ஞாபக சக்தியை கொடுக்கும்.மாம்பழம் இருதயம் வலிமை பெறும்.திராட்சை -வாய்க்குமட்டல், வாந்தி. வாய்க்கசப்பு சரியாகும்.சின்ன வெங்காயம் -கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது.
உளுந்து - 1/4 கப் எடுத்து நன்கு கழுவி குக்கரில் சேர்த்து அதோடு 11/2 கப் தண்ணீர், உப்பு - ஒரு சிட்டிகை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து கொள்ளுங்கள். அதோடு தேங்காய் பால் -1கப், நாட்டு சர்க்கரை - தேவைக்கு, ஏலக்காய் பொடி -1/4 ஸ்பூன், சுக்கு பொடி -1/4 ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம். இதை குடிப்பதால் உடல் சூடு குறையும்,மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்சனை நீங்கும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு பிரச்சனை நீங்கும். பெண்கள், பெண் குழந்தைகள் கண்டிப்பாக பருக வேண்டும்.
மோரில் சிறிது உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். அல்லது மோரில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வாயில் ஐந்து நிமிடம் வத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குறையும்.ஒரு நாளைக்கு4 முதல்6 முறை உப்புநீரில் வாயைக் கொப்புளித்தால் மவுத் அல்சர் விரைவில் குணமாகும்.சிவந்த புண்கள், வலி மற்றும் எரிச்சலை உணர்ந்தால், நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் உள்ள மருத்துவ குணங்கள், எரிச்சலைக் குறைத்து பாக்டீரியா தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.
தேனுடன் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.கீழாநெல்லி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளிக்க தோல் அரிப்பு குறையும்.பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து குடித்து வர இருமல் நிற்கும்.பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை உணவுக்கு முன் சாப்பிட மார்பு வலி குறையும்.குங்குமப்பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.