டேனர்ஸ் காசியா என்றும் அழைக்கப்படும் ஆவாரம் பூ, இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவரமாகும்.ஆவாரம் பூ டீ பசியைக் குறைக்கவும், வயிறு முழுமையின் உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.ஆவாரம் பூ தேநீர் இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவும், இது நீரிழிவு அல்லது முன்கூட்டிய நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெறும் வயிற்றில் ஆவாரம் பூ தேநீர் குடிப்பதன் மூலம், நாள் முழுவதும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய்,பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர்,உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் எ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.சர்க்கரை வள்ளி கிழங்னை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிடலாம்.தைராய்டு சுரப்பின் இயக்கத்தை சீராக்கும்.ரத்த செல்கள் உருவாக உதவும்.எலும்பு ,பற்கள் உறுதிப்படுத்தும்.பளபளக்கும் சருமத்தை பெறலாம்.உடல் எடை கூடும்.
அரிப்பு, சொறி போன்ற சரும நோய் உள்ளவர்கள் தினசரி குளிப்பதற்கு அரப்புத் தூளைப் பயன்படுத்தவும்.தேனுடன் சுக்கைக் குழைத்து உணவுக்கு முன் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டைக் கட்டு சரியாகும்.தலைவலி, தலைச்சுற்றலைப் போக்க, அடிக்கடி சுக்கு கஷாயம் அருந்தி வர வேண்டும்.சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து குழைத்து உண்ண சூலை நோய் குணமாகும்.திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊற வைத்து. சாறு பிழிந்து பருகினால் இதய நோய் அகலும்.பெண்கள் வாரத்துக்கு இருமுறை மஞ்சள் தேய்த்து குளித்தால், தேவை இல்லாத இடங்களில் முடி வளராது.கடுக்காய், மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.வசம்பை சிறிது நீர்விட்டு மை போல் அரைத்து தலையில் பூசி அரை மணி நேரத்துக்குப் பின்னர் தலையை அலசினால், பேன்கள் மடியும்.
எட்டு மணி நேரம் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை கழுவி வடித்து மிக்ஸியில் பொடிக்கவும் ஒரு கிளாஸ் அரிசிக்கு மூன்று கிளாஸ் தண்ணீர்விட்டு இதனுடன், சின்ன வெங்காயம் அரிந்தது. பச்சை மிளகாய், பூண்டு சீரகம், மிளகு கொத்தமல்லி கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து மூன்று விசில் விடவும். பின் இறக்கி ஆற வைத்த கஞ்சியோடு தேங்காய் பால் எடுத்து ஊற்றி கலந்து பரிமாறவும்.வாரம் இரு முறை குடித்து வரும்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புற்று நோய்க்கும் உடல் எடை குறையவும் சர்க்கரை நோயை கட்டுப்படுக்கவும் உதவியாக இருக்கிறது.
கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் பால் முதலிடத்தை பிடிக்கிறது. 1 கிளாஸ் பாலில் 300 கிராம் கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் தாதுக்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.ப்ரோக்கோலி தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்படும். இதில் இருக்கும் வைட்டமின்K சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில்கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. கீரைகள் உடலுக்கு தேவையான 25%கால்சியம் சத்துக்களை தருகிறது. இதில் நார்சத்து, வைட்டமின்A மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும் எலும்புகள் உறுதியாக வலுவாக இருக்க பப்பாளி பீன்ஸ் பிரண்டை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும், அதிமதுர பொடியை2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி. இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிலிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியே செல்லும். குளிப்பதற்கு சுடு நீரை விடபச்சை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது.
எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலியைக்' குணப்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, ஒரு வாழைப்பழத்தை * நசுக்கி பிழிந்து, சாற்றில் கால் பங்கு உப்பு மற்றும் கால் பங்கு புளி சேர்த்து கொதிக்க வைத்து, வலி உள்ள இடத்தில் வெதுவெதுப்பான நீரில் தடவவும். மூட்டு வலி குறையும்.
உணவின் எச்சங்களையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றி. செரிமானத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; கொழுப்பை கரைக்கும். உடலின் அமில கார சமநிலையை (பி.எச்) பராமரிக்க உதவும். நீர்ச்சத்தை தக்கவைப்பதால் சரும செல்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
அம்மை போன்ற உடல் உஷ்ன நேய்களை எதிர்கொள்ள மண்பானை தண்ணீரில் சிறிது வேம்பு கொழுந்து இலைகளை பறித்து போட்டு குடியுங்கள்..என்னதான் வீட்டுல ஏசி பிரிட்ஜ் எல்லாம் வச்சி இருந்தாலும் ஒரு ஓரமா மண் பானையில் தண்ணி புடிச்சி வச்சி குடிங்க…