தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.அமரும் போது வலையாதீர்கள்.நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள்.கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள். தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.டூ-வீலர் ஒட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள். பலுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்.காலை 20 முறை மாலை 20 முறை ,கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.
ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி, செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனுடன், கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.உடலுக்குத் தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. வாயு பிரச்சனைகள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தடுக்கிறது.இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இவற்றில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் கே மூளைக்கு நல்லது.
சப்ஜா விதைகள் பார்ப்பதற்கு மிக, மிக சிறிய அளவில் இருக்கும். சப்ஜா விதைகளில் நார்ச்சத்து மிகுதியாக கொட்டி கிடக்கிறது. பொதுவாக கோடைகாலத்தில் நாம் அருந்தும் குளிர்பானங்களில் இந்த சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்கிறோம். இதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. ரத்த சர்க்கரை குறைய தொடங்குகிறது மற்றும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் இந்த சப்ஜா விதைகளில் இருக்கிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சப்ஜா விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுபாட்டுக்குள் இருக்கும் மேலும் சப்ஜா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்ததால் செரிமானத்தை உயர்த்தி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன.
வேர்க்கடலையில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க முடியும்.வேர்க்கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துவது கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.சப்போட்டா உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்சனைகள் வரலாம்.இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.சப்போட்டாபழம். தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், பல உடல் நல பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. கோடைக்காலத்தில் அதிகம் பார்க்கப்படும் சப்போட்டா இனிப்புசுவை கொண்டது. தினமும் இதை சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். நீரிழிவு, ஒவ்வாமை, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பொதுவாகவே சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்.
பாதாம் - நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் E வழங்கும்.வால்நட் - நரம்பு செயல்பாட்டை தூண்டும் நல்ல கொழுப்பு.முருங்கைக் கீரை - மக்னீசியம், வைட்டமின்கள்; நரம்பு சோர்வை குறைக்கும்.வெந்தயம் - நரம்பு பலவீனத்தை மெதுவாக சரிசெய்ய உதவும்.மோர் - குடல் நலம் சீராக இருந்தால் நரம்பு நலமும் மேம்படும்.நல்லெண்ணெய் (அளவோடு) - நரம்பு மென்மை மற்றும் பாதுகாப்புக்கு உதவும்.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.குறிப்பு - தூக்கக் குறைவு, அதிக மன அழுத்தம், சத்தற்ற உணவு -நரம்பு பலவீனத்தின் காரணங்கள்.
கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதுடன் உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் மிகவும் உதவி செய்கிறது.கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.
முதல் நாள் இரவில் பீட்ரூட்டை பாதியாக அறுத்து, ஒரு பாதியை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் அந்த பீட்ரூட் தண்ணீரை நன்கு வடிகட்டி குடிக்கவும்.இதை தொடர்ந்து குடித்து வந்தால்உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்பட உதவும்.முகம் பளிச்சிடும்.கரும்புள்ளிகள் குறைந்து இயற்கை பொலிவு கிடைக்கும்.
பித்தம் பிரச்சனைகள் தீர எளிய வழிமுறைகள்எலுமிச்சை பித்தத்தை குறைக்கும்.தனியாவும் இஞ்சியும் ஜீரணத்தை அதிகரிக்கும்.உலர் திராட்சை மலச்சிக்கலை போக்கும்.தேன் வயிறு பிரச்சனைகளை சரிசெய்யும்.பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.பித்தம் குறைய தேவையான பொருட்கள் :இஞ்சி – 25 கிராம்,கொத்தமல்லி விதை (தனியா) – 2 ஸ்பூன்,எலுமிச்சை – 1,உலர் திராட்சை – 10,பூண்டு – 4 துண்டுகள்,தேன் – 1 ஸ்பூன்,செய்முறை :இஞ்சியின் தோலைப் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும்.தனியா, உலர் திராட்சை, பூண்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பின் இதனை வடிகட்டவும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.இதை மாதம் ஒருமுறை குடிக்கலாம், அல்லது எண்ணெய் பதார்த்தம் கலந்த உணவை உண்டபின் இதனை அருந்தினால் பித்தம் குறையும்.
உடம்பு சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கி சாறு.தேனுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.பூண்டில் பென்சிலின் சக்தி அதிகம் உள்ளது."மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு.வாத நோய் தடுக்க அரைக்கீரை.வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.உடல் பருமன் குறைய முட்டைக்கோஸ்.பித்தம் தணிக்க நெல்லிக்காய்.வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.