உலக பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி மீது எதிர்பார்ப்பு.
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது கட்டப் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஷீத்தல் தேவி பங்கேற்கிறார். நடப்பு உலக சாம்பியனும், காம்பவுண்டு பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையுமான 19 வயது ஷீத்தல் தேவி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர்-1 வீரரும், நடப்பு சாம்பியனுமான தோமன் குமார், ராகேஷ் குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். ரீகர்வ் பிரிவில் ஹர்விந்தர் சிங்கும் போட்டியிடுகிறார்.
மேலும், செக் குடியரசின் சர்கா பல்டர் முசிலோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்பதால் போட்டியில் கடும் சவால் நிலவுகிறது.
0
Leave a Reply