விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll) அகற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட VVPAT - வாக்குப்பதிவு இயந்திரத்தில் மீதமுள்ள paper roll - களை அகற்றும் பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிட்டங்கியினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (06.08.2026) திறந்து வைத்தார்.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-இல், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் நடைபெற்றது.
அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 308 விவிபேட் இயந்திரங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 291 விவிபேட் இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 281 விவிபேட் இயந்திரங்களும்,
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 292 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 2,001 விவிபேட் இயந்திரங்களில் உள்ள வெப்ப உணர் காகித சுருள்களை (VVPAT Paper Roll-Thermal Paper) அகற்றும் பணிகள் இன்று (06.08.2026) முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
மேலும், பழுதடைந்த 308 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுரூ, பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply