25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் துாய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் துாய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை செயல் பாட்டிற்கு வந்த பின்பும் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்று  பாதிப்பு ஏற்படுத்துகிறது. 

சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ்ஸ்டாண்ட் செல்லும் ஓடையில்மக்களால் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக்பைகள், தெர்மாகோல் ஓடை பாலத்து தூண்களில் தடுக்கப்பட்டு மொத்தமாக தேங்கிநின்றன.இவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கடந்த முறை பெய்த கன மழையால் அகலமான கால்வாயையும் மீறி கழிவு நீர் ரோட்டில் ஓடியதுடன் அருகாமையில் இருந்த வாகன காப்பகம் உள்ளிட்டவைகளுக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்படுத்தின.

ஒருமுறை உபயோகித்து வீசி எரியும் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில்நகராட்சி பகுதிகளில் ,கண்காணிப்பை அதிகரிப்பதுடன் கழிவுகளைமுறையாகதூய்மைபணியாளர்களிடம்ஒப்படைக்கவேண்டும்.இதுகுறித்துதொடர்விழிப்புணர்வுநடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News