25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (28.11.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத வைப்புத் தொகைக்கான தீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், இந்த முகாமானது 04.10.2025 முதல் 31.12.2025 வரை 3 மாதங்கள் நடைபெறும். வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்பு தொகையாளர்கள் மற்றும் இறந்த வைப்பு தொகையாளர்களின் வாரிசுகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையினை வட்டியுடன் பெறலாம்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத சுமார் 3,48,662 கணக்குகளில் ரூபாய் 66.48 கோடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 364 கணக்குகளில் ரூபாய் 67.78 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 எனவே, பொதுமக்கள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் இருப்பினை www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, அப்பணத்தை வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ரா.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News