25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,

இதயத்தின் துடிப்பு ஒய்வில்லாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சாதாரண ஈ.சி.ஜி.யினால் பதிவு செய்ய முடியாது, இதற்குக் காரணம் உண்டு. பரிசோதிக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே இதயத்தின் மின்னழுத்த இயங்கலை ஈ.சி.ஜி.யானது பதிவு செய்கிறது. சில நோயாளிகளுக்கு ஏற்படும் துடிப்புக் குறைபாடு, அதிக துடிப்பு, திடீர் மயக்கம், மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்றவை எப்போதும் வரக்கூடியவை அல்ல. எனவே, இவற்றைஈ.சி.ஜி.யினால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. இப்படி விட்டு விட்டுஏற்படும் நாடித்துடிப்பைக் கண்டுபிடிப்பதற்கு ஹோல்டர் மானிட்டர் (Holter monitor) மிகச்சிறந்த சாதனமாக உள்ளது.

ஹோல்டர் மானிட்டர் என்பது சிறிய,கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம்வரை தொடர்ந்து ஈ. சி. ஜி. யைப்  பதிவு செய்யும் கருவியும் கூட. நோயாளியின் மார்பில் சில மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டு, ஒரு சிறிய ரெக்கார்டருடன் இந்த ஹோல்டர் மானிட்டரானது இணைக்கப்படும். ஹோல்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதும் நோயாளி தனது வழக்கமான தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News