சுவையுடன் சத்தும் நிறைந்த கேரட் சாதம்.
கேரட் சாதம் சுவையுடன் சத்து நிறைந்துள்ளதாகும். இதை நெய்யோடு சேர்த்து செய்வதால் சுவையும் ,சத்தும் கூடுதலாக கிடைக்கும். அரிசியை குக்கரில் வேகவைத்து ஆறவைத்து, கேரட்டை தோல் சீவி வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து, துருவிய கேரட்டையும், உப்பு சேர்த்து அது மென்மையாக ஆகும் வரை மூடி வேகவைத்து, பிறகு ஆறிய சாதத்தை கேரட் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும். உப்பு சரி" பார்க்கவும், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து,கொத்தமல்லி இலையை தூவி கிளறினால் சுவையான, அருமையான கேரட் சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.
0
Leave a Reply