25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் -15 அனுசரிக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் -15 அனுசரிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.06.2026) முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா அவர்கள் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதியோர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து அவர்களை கன்னியமாகவும், மரியாதையாகவும் நடத்துவதை உறுதி செய்திடும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன்-15, 2026 திங்கட்கிழமையன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சமூக நலத்துறையின் மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 மேலும், இராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள், இராஜபாளையம் நகராட்சி ஆணையர் திரு.நாகராஜன் அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.கி.திலகம் அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்  உறுதி  மொழி எடுத்திடும் நிகழ்ச்சியும் மற்றும் இத்தினம் தொடர்பாக பள்ளிகளில் நடத்தபட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கில் அவர்கள்  மற்றும் தனி  துணை ஆட்சியர்(ச.பா.தி) அவர்கள் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜீன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News