25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின

சேத்தூர் பிர்க்காவில் உள்ள நகரகுளம், வாண்டையார்குளம், பெரியகுளம், வாழவந்தான் கண்மாய், நச்சாடபேரி ஆகிய கண்மாய் பகுதிகளில் தக்கை பூண்டு செடி விதைப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது. தற்போது கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளன. இதனால் விவசாயிகள் நெற்பயிர் நடுவதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் வருகிற புரட்டாசி மாதம் நடவு பணிகளுக்காக தற்போது விவசாய நிலத்தில் கொழிஞ்சி செடிகளை போட்டு உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகள் நடைபெறுகிறது

விவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது தெற்கு தேவதானம், வடக்கு தேவதானம், கோவிலூர் ஆகிய பகுதியில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிறைந்தன. இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். முதல் போக அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கால நடவு பணிகளை ஆரம்பிக்க வயல்களை சீரமைக்கும் பணி நிலத்தை உழுது சமன் செய்யும் பணி போன்றவை நடந்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெற்கு தேவதானம், வடக்குதேவதானம், கோவிலூர், சாஸ்தா கோவில் பகுதியில் ஆடிப்பட்டம் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *