25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி  நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில்  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 10.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர்களுக்கான
தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியில் குழுவாக அதிகபட்சம் மூன்று நபர்கள் பங்கு பெறலாம். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாக ரூ.10,000- மூன்றாம் பரிசாக ரூ.7000- வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 96988-10699 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News