25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

1000 கோடி வசூலுக்கு ரஜினிக்கு வில்லனாகும் கமல்

கமல் நடிப்பில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியை சந்தித்த இப்படத்தைக் கொண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாய் லோகேஷ் தற்பொழுது இப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.இப்படத்தில் லோகேஷ், ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைப்பதாக பேச்சும் எழுந்துள்ளது. தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாய் நடித்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 இப்படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பனுக்காக இப்படத்தில் கமல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தற்பொழுது இப்படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார்.அடுத்த1000 கோடி வசூலிக்க, புதிய யுத்தியை பயன்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி என்றால் இது இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து நிற்கும். மேலும் உலக அளவில் வசூலில் இதுதான் பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..அவ்வாறு இது மட்டும் நடந்து விட்டால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட படமாக இவை அமையும் எனவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் படைக்கும் லோகேஷ் கனகராஜின் மதிப்பும் உயர்ந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News