பீர்கங்காய்
இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால், இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும்.
இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே ,சமைத்து சாப்பிடுவது நல்லது, அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்.
இதை வாங்கும்போது தோல்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம்.
இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு ,அதிகமாவதை தடுக்கும் மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் ,நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது.
சிறுநீரக கோளாறுகளுக்கு, நன்கு முற்றிய பீர்கங்காயை பயன்படுத்தப்படுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின்கள், தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.
இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது.
0
Leave a Reply