25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் எச்சரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

17.02.2026 வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2508 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.39,48,13,414/-ஐ (ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடியே நாற்பத்தி எட்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்றி பதிநான்கு மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நேர்வில், விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை கள ஆய்வில் உறுதி செய்த பின்னரே விவசாயிகளுக்கு முறையாக 10(1) சிட்டா மற்றும் அடங்கல்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்களிடமிருந்து போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மேற்படி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம் பராமரிக்கும் சட்டம் 1955-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News