25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ராஜபாளையம் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்டினால் அவதி  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்டினால் அவதி  .

ராஜபாளையம் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த நிலையில், கட்டடங்கள் பலமிழந்ததால்,ரூ.3கோடி 40லட்சம்செலவில்புதுப்பிக்கப்பட்டுகலைஞர்நகர்புறமேம்பாட்டுதிட்டத்தின்கீழ் ,மே 29 இல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ,கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் ,  ஊர், பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை . பணிக்கு செல்பவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர்பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். 

இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. வளாகத்தில்கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட்திறக்கப்பட்டு  ஆறு மாதங்களை கடந்தும், செயல்பாட்டிற்கு வந்தும் , பயணிகளுக்கு வசதிகள் இல்லை. இதை யார் சரிசெய்வார்கள் ? மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News