25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


பப்பாளி பழ விதைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பப்பாளி பழ விதைகள்

பப்பாளி பழத்தில் இருப்பதைப்போலவேஅதன்விதையிலும்நிறையமருத்துவகுணமும்ஊட்டச்சத்துகளும் இருக்கிறது.பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.நமது உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது..பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட்டுகள் மற்றும் பரிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிலும் அல்சர் என்னும் வயிற்றுப்புண், உணவுக்குழாய் தொற்று இருப்பவர்கள் கட்டாயம் பப்பாளி விதைகளை பச்சையாகவோ அல்லது நன்கு உலர வைத்தோ சாப்பிட்டு வரலாம்.பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. உடலுக்குப் போதிய வலிமையைக் கொடுக்கிறது. பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால், இதயக் குழாய், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக பப்பாளி விதைகளைச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.

ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள்.பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News