உடல் சோர்வு குறைய கருஞ்சீரகம்.
கருஞ்சீரகம் அல்லது கருப்பு விதைகள் என அழைக்கப்படும் இது உணவு தயாரிக்கவும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது அது இரத்தத்தில் உருவாகி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பதில் கருஞ்சீரகம் பயனுள்ளதாக சொல்லப்படுகிறது.
கருஞ்சீரகம் விதைச்சாறு புற்றுநோய் செல்களை செயலிழக்க செய்ய உதவுவதாக காட்டுகிறது.
ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும்.தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.
அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயு மற்றும் குடல் தொந்தரவு குறையும்.
0
Leave a Reply