25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025-ஐ முன்னிட்டு தேசிய வாக்காளர் தினமான 25.01.2025 அன்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் 25.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் தேர்தல் தொடர்பான வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது.

இதில் 16 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் குழுக்களாகவே மட்டும் கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் நபர்கள் 20.01.2025 தேதிக்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025/  என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் நாளான்று பதிவு செய்த நபர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுன் வர வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்வி கேட்கப்படும். போட்டியானது OMR  தாளில் பல சுற்றுகளாகவும், இறுதி சுற்று நேரடி கேள்விகளாக கேட்கப்படும்.எனவே 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி போட்டியில் கலந்து கொள்ளலாம் என  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News