25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சைக்கிள் ஓட்டுதலின் போது மனித உடலில் ,தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சைக்கிள் ஓட்டுதலின் போது மனித உடலில் ,தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

நடைப்பயிற்சி மற்றும் மெது ஓட்ட பயிற்சிகளை விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு 4 மடங்கு அதிக ஆற்றலையும், ஓடுவதை விட 8 மடங்கு அதிக பலன்களையும் தருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மனிதர்கள் அதிக தூரம் பயணிக்க உதவுவது சைக்கிள் மட்டுமே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..உடலின் தசைகளுக்கு தேவையற்ற அழுத்தம் தராமல், உடலின் ஒரு குறிப்பிட்ட தசை சக்தியை இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடலும் நன்கு இயங்க சைக்கிள் உதவுகிறது என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த ஆய்வில், நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது, அடிப்படையில் உடல் முன்னோக்கி நகரும் போது, தரையில் விழுந்து விடாதபடி உடலை கட்டுப்படுத்தும் செயல்பாடு நடைபெறுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக கால் மூட்டுகளை தூக்கி கவனமாக வைக்கும் செயல்முறையின் போது உடலில் இருந்து அதிகமான சக்தி இழப்பு ஏற்படுகிறது.

ஆனால், சைக்கிள் என்ற மிதிவண்டியில்,கால்கள் மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி அதனை அழுத்த விசையாக மாற்றுகின்றன. நடைப்பயிற்சியில் ஒட்டுமொத்த உடலும் அழுத்தத்தை உணர்கிறது. இதற்கு பதிலாக, சைக்கிள் பெடல்களை மிதிக்கும் போது கால்களில் இருந்து மட்டும் தரப்படும் அழுத்தம்,சைக்கி ளின் சுழற்சி ஆற்றலாக மாறி விடுகிறது. இதன் மூலம், மனித உடலில் தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்டுதலின் போது, குறைந்த ஆற்றல் செலவழிப்பு மூலம் உடலில் அதிக ஆற்றல் சேமிக்கப்ப டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News