25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாம்.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19.12.2025) வேளாண்மைத்துறை சார்பில், பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.

தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தவணைத் தொகை பெற தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் விவசாயிகள் நில ஆவணங்களுடன் வந்து, தங்களது நில உடைமைகளை பதிவு செய்து பயனடைந்தனர்.மேலும், இதுவரை பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு சென்று நில உடைமை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News