25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திப்பிலி ரசம் . 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திப்பிலி ரசம் . 

தேவையான பொருட்கள் - 5மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை,

.2½கப் தனியா,முக்கால் கப் பெருஞ்சீரகம்.,கால் கப் வெந்தயம்,

15கார சிகப்பு மிளகாய்,10 கறிவேப்பிலை,½கப் திப்பிலி,

1 தேக்கரண்டி பெருங்காயம்

 

ரசம் செய்ய - 2 மேஜை கரண்டி துவரம்பருப்பு,1 மேஜைகரண்டி தேங்காய் எண்ணை, 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1தேக்கரண்டி கடுகு,

1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது,2 வரமிளகாய்,¼ கப் கறிவேப்பிலை,

சிட்டிகை பெருங்காயம்,அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி,

1கப் தக்காளி துண்டுகள்,½தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste),1/4 கப் வெல்லம் பொடித்தது (ஆப்ஷனல்),2½மேஜை கரண்டி ரச பொடி,

கால் கப் கொத்தமல்லி ,தேவையான உப்பு 

 

செய்முறை - ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

ரசப் பொடி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சிறிது சூடான பின் தனியா வறுக்க. பொன் நிறமானதும், ஒரு கிண்ணத்தி மேல் ஒரு ஜல்லடையில் வடிக்க. வறுத்த தனியாவை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பிண் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், பெருஞ்சீரகம் வறுக்க. சீரகம் பொறிந்த பின் முன் போலவே எண்ணையை வடிக்க. வறுத்த சீரகத்தை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், வெந்தயம் வறுக்க. முன் போலவே எண்ணையை வடித்து, பேப்பர் டவல் மேல் போடவும் .

குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், சூடான எண்ணையில் மிளகாய் வறுக்க; காந்த வைக்காதீர்கள். இப்பொழுது அதே வாணலியில் எண்ணை சேர்க்காமல் திப்பிலி, கறி வேப்பிலை வறுக்க பச்சை வாசனை போக. பெருங்காயம் சேர்க்க. வீடு முழுவதும் வாசனை நிரம்பும்.வறுத்தபொருட்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. பொடி தயார். தட்டில் போட்டு ஆற வைக்க. ஒரு காற்று புகாதairtightcontainer இல் போட்டு சேமித்து வைக்க. தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து சாம்பார், ரசம் செய்யலாம்.¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்.

மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்கவும் . பூண்டு வெளி தோலை நீக்கு உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்கவும் .6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்க்க`10 நிமிடம் ஹைflame மில் கொதிக்க வைக்க,புளி பேஸ்ட்2 கப் நீரில் கரைத்து சேர்க்கவும் .

நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும்.¼ கப் வெல்லம் சேர்க்க. பச்சை வாசனை போகட்டும். கொதி வந்ததும்.2 மேஜைகரண்டி ரச பொடி1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்கவும் . நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும். உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க,2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க,கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News