25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சமூக நல அலுவலகத்தின் கீழ்  செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல்  தொழில் நுட்ப உதவியாளர்(PMMVY ) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில் நுட்ப உதவியாளர்(PMMVY ) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் .

 சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர்(PMMVY ) பணியிடத்திற்கு 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்-   தகவல் தொழில் நுட்பஉதவியாளர் (IT Assistant for PMMVY Scheme),  கல்வித்தகுதி  கணினி, தகவல் தொழில் நுட்பபிரிவில் இளங்கலைபட்டம் பெற்றிருக்கவேண்டும், (Educational Qualification- Graduation in Computer/IT).

 மேலும், முன் அனுபவம், அரசு சாரா தகவல் தொழில்நுட்ப சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை,செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம்  மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும், (Experience Working Knowledge in computers/IT etc with a minumym of 3 years experience in data management, process documentation and web-based reporting formats, at state or district level  with government or non-governmental/ IT bsed organizations).

                     வயது வரம்பு( Age Limit Upto 35 Years ) 35 வயதிற்குள் இருக்கவேண்டும். தொகுப்பூதியமாக  மாதந் தோறும் ரூ.20000- வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய  நாள் 25.08.2025 அன்றே கடைசி நாளாகும்.

 மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,  விருதுநகர் மாவட்டம். என்ற முகவரிக்கு சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தொிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News