25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூடும் சங்கமம் விழா முன்னாள் மாணவர்கள் சங்க கலையரங்கில் வைத்து நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர் சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார்‌. தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சங்கப் பொருளாளர் வெங்கடேஸ்வரன் மாணவர் சங்க குறிப்புரை வழங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ராமகிருஷ்ணன் மதிப்புரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். சங்கத்தின் திட்ட பணிகள் குறித்து துணைத் தலைவர் குமார் ராஜா விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக சங்கம ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகநாத் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 450 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News