25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த பல்கலைக்கழக வளாகம் திறப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த பல்கலைக்கழக வளாகம் திறப்பு.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS திருவான்மியூர் வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். விழாவில் UAE கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர் அகமது மிர் ஹாஷிம் கூரி, VISTAS நிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர் டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

AI வகுப்பறைகள், தொழில் இணைப்பு ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் உலகத் தர மாணவர் உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், எதிர்காலத் திறன்களை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. UAE-யில் விமானப் பயிற்சிப் பள்ளி அமைக்க VISTAS–Aspin Holding–MH Cockpit இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், AI, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு துறைகளில் ஜோஹோவுடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. Intel Unnati, TCS iON, Microsoft, Oracle Academy ஆகியவற்றுடன் இணைந்த சிறப்பு மையங்களும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தி, VELS உடன் இணைந்து செயல்பட ஜோஹோ ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News