25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


அஜீரணக் கோளாறு,வயிற்றுக் கடுப்பு சரியாக்கும் ஓமம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜீரணக் கோளாறு,வயிற்றுக் கடுப்பு சரியாக்கும் ஓமம்!

ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும். 

 ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு. சித்தரத்தை, அக்கரகாரம் மற்றும் திப்பிலி வேர் பொடியை சம அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட, தொண்டையில் புகைச்சல் நீங்கும்.

ஓமம். சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.

ஓம கஷாயம் அருந்தினால், பசியை துாண்டும்.

ஜலதோஷம் குறைய, ஓமத்தை பொடித்து. உச்சந்தலையில் வைத்து தேய்க்கலாம்.

ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.

ஓம எண்ணெயை மூட்டு வலிக்கு தடவ, நாளடைவில் வலி குணமாகும்.

ஓம எண்ணெயை, பஞ்சில் தோய்த்து, பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால், வலி நீங்கும்.

ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்க வேண்டும். உணவு உண்ட.. 20 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுக் கடுப்பு சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News