25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒலிம்பிக் சாம்பியன் ஆக்சல்சென் ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக் சாம்பியன் ஆக்சல்சென் ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்.

விக்டர் ஆக்சல்சென்டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர். நம்பர் ஒன் வீரரான ஆக்சல்சென் 2020 மற்றும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

2017 மற்றும் 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலும், 2020, 2022-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனிலும், ஐரோப்பிய சாம்பி யன்ஷிப்பில் ஒற்றையரில் 3 முறையும், அணிகள் சாம்பியன்ஷிப்பில் 6 முறையும் மகுடம் சூடியுள்ளார். தரவரிசையில் 183 வாரங்கள் 'நம்பர் ஒன்இடத்தில் இருந்தார் . சீனாவின் லின்டானுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இருமுறை மகுடம் சூடிய வீரர் இவர்தான்.

விக்டர் ஆக்சல்சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதுகுவலி பிரச்சினையால்   எந்த போட்டியிலும் .விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். தனது 32-வது வயதிலேயே பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக   அறிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News