25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்து வேப்பம்பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்து வேப்பம்பழம்.

தமிழகத்தின் முக்கிய மரங்களில் வேம்புவும் ஒன்று. இதன் இலை முதல் பட்டை வரை கசப்புத்தன்மை கொண்டவை என்றாலும், வேப்பம் பழங்கள் சற்று இனிப்பு தன்மை உடையவை. மருத்துவ குணங்களையும் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் பழுத்து உதிரும். இவை, இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்தாகும். தோல் புண்கள் மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. உடலில் பல நோய்களை இயற்கையாகவும் வேகமாகவும் குணப்படுத்துகிறது. வேப்பம் பழ விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது. வேப்ப எண்ணெயில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறிப்பாக, முடிகளில் வறட்சியை நீக்கி, சருமம், முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வேப்பம் பழங்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, 'பிளாவனாய்டுகள்' என்ற பொருள் நிறைந்து இருப்பதால், உடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழங்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News