25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி (First Level Checking) நடைபெறவுள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி (First Level Checking) நடைபெறவுள்ளது .

எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்பதால், விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம். தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

மேற்படி, 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வைப்பறை கிட்டங்கி, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(LA) மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கிட்டங்கி திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் நிறுவன பொறியாளர்களால் சரிபார்க்கப்படும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News