25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  ஓட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  ஓட்டம் .

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் வருகின்ற (26.06.2026) முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்தி வாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும்.

 ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் தூரம் நடைபெறும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26-ம் நாள் அன்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் துவங்கி நடைபெறுகிறது.

 இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 78240 09970 / 04562-225947 என்ற தொலைபேசியின் மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம். 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News