இந்திய வீராங்கனை 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் பிரஞ்சலி (25 மீ., 'பிஸ்டல்') பிரிவில் தங்கம் வென்றார்.
. காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமால் (573.14 புள்ளி), அனுயா பிரசாத் (569.15) முதலிரண்டு இடம் பிடித்தனர்.
பைனலில் பிரஞ்சலி, 34 புள்ளி களுடன் முதலிடம் பிடித்துதங்கத்தை தட்டிச் சென்றார். பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சகவீரர்அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றினார்.
தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற அனுயா, 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்து உள்ளன.
0
Leave a Reply