25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உத்தரகாண்ட் மாநிலத்தில், தேசிய விளையாட்டு 38வது சீசன் விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உத்தரகாண்ட் மாநிலத்தில், தேசிய விளையாட்டு 38வது சீசன் விளையாட்டு போட்டிகள்

 துப்பாக்கி சுடுதல்  

ஆண்களுக்கான துப் பாக்கி சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மகாராஷ்டிரா வின் பார்த் மானே, 252.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு மகா ராஷ்டிரா வீரர் ருத்ராங்க் ஷ் பாட்டீல் வெள்ளி, சர் வீசஸ் அணியின் கிரண் ஜாதவ் வெண்கலம் வென்றனர்.  

பளு தூக்குதல்  

ஆண்களுக்கான 73 கிலோ ட பளுதுாக்குதலில் தமிழகத்தின் அஜித் நாராயணா தங்கம் வென்றார். ஹரியானாவின் தீபக், சர்வீசஸ்  அணியின் லால்ஹுந்தாரா  முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

பெண்களுக்கான பளுதுாக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில், மணிப்பூரின் பிந்தியாராணி தேவி பளுதுாக்கி இருந்தார். ஏற்கனவே 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் தேசிய சாதனை பிந்தியாராணியின் வசம் உள்ளது.

பெங்கால் வீராங்கனை ஷரபானி தாஸ் (187 கிலோ), மணிப்பூரின் நிலாம் தேவி (182 கிலோ) முறையே வெள்ளி, வெண் கலம் கைப்பற்றினர்.

நீச்சல் 

ஆண்களுக்கான நீச்சல் போட்டி 200 மீ., பேக் ஸ்டிரோக்' பிரிவில் தமிழகத்தின் நிதிக் (2 நிமிடம், 04.75 வினாடி) வெள்ளி வென்றார். மகாராஷ் டிராவி்ன் ரிஷாப் தாஸ் (2:03.34) தங்கம் கைப் பற்றினார். குஜராத் வீரர் தேவான்ஷ் (2:06.56) வெண்கலம் வென்றார். 

ஆண்களுக்கான 50 மீ., பிரீஸ்டைல்’ பிரிவில் தமிழகத்தின் ஜாஷுவா வெண்கலம் வென்றார். மகாராஷ்டிராவின் மிஹிர், கர்நாடகாவின் ஸ்ரீஹரி முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

 கிரிக்கெட்  

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி நேற்று மஹாராஷ்டி ராவில் உள்ள புனே மைதானத்தில் நடந்தது..

இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னுக்கு  ஆல் அவுட்டாகி தோற்றது. 

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. 

டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டில்லியில் இன்று துவங்கும் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றில் சசிகுமார், ராம்குமார் இடம் பெற்றுள்ள இந்திய அணி, டோகோ அணியை சந்திக்கிறது.   

பாட்மின்டன்

இந்தியாவின் ஸ்ரீகாந்த்தாய்லாந்து மாஸ்டர்ஸ் காலிறுதியில் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி தோல்வி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *