25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Oct 06, 2024

குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேற…..

குடலில் சேர்ந்து இருக்கும் கற்களைஅகற்ற சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் ,வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து ,காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தர வேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறி விடும். முதல் நாளே வலி இருக்காது.  3 நாட்களில் பூரணக் குணம் தெரியும்.

Oct 04, 2024

நோய்களை உருவாக்கும் உணவுகள் 

டால்டா - மாரடைப்பு, கேன்சர், உடல் பருமன்,இரத்த அழுத்தம். மைதா- மலச்சிக்கல், நீரிழிவு. கணைய பாதிப்பு.  வெள்ளை சர்க்கரை - எலும்பு தேய்மானம், நீரிழிவு, உடல்சூடு, தோல் நோய், ஆண்மையின்மை யின்மை. ரிபைண்ட் ஆயில்(சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் )  - அல்சர், புற்றுநோய், மூட்டுவலி, முடி நரைத்தல், நைஸ் உப்பு ( அயோடின் சேர்த்த உப்பு )  - பக்கவாதம், இரத்தகொதிப்பு, அறிவுத்திறன் பாதிப்பு. அஜீண மோட்டோ: ஜீரண உறுப்புகள் சிதைவு, நோய்களை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது .

Sep 30, 2024

குப்பைமேனி இலை சாறு குடிப்பதால்….

குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சைனஸ் நோய்க்கு சிறந்த தீர்வாகும். ரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும். சொத்தைப் பல் உள்ளவர்கள் பல்லில் வலி ஏற்படும் போது 2 அல்லது 3 குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தை பல்லில் வைத்தால், அந்த  பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும். நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் படுத்திருப்பதால் படுக்கைப்புண் ஏற்படும். இந்த படுக்கைப்புண் நீங்க, குப்பைமேனி இலையுடன் வேப்ப எண்ணெய் சேர்த்து அரைத்து புண்களில் தடவி வந்தால், விரைவிலேயே புண் ஆறிவிடும். படை சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலை உடன் மஞ்சள்  மற்றும் கல் உப்பு ஆகியவற்றை அரைத்து, அதை தடவி பின் சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய் இருந்த தடமே இல்லாமல் போய்விடும். அதே போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும், குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்ந்து அரைத்து புண்ணில் தடவி வந்தால் புண் விரைவிலேயே ஆறும். தேள், பூரான் பூச்சிகடிக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.

Sep 29, 2024

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்.

முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு, எள்ளுருண்டை மணத்தக்காளி வத்தல்,அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலைஉருண்டை விதையுள்ள கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை,*கறிவேப்பிலைத் துவையல், பீர்க்கங்காய்,பிரண்டை, முள்ளங்கி, பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி,உளுந்து, கேழ்வரகு தோசை, பொன்னாங்கன்னி கீரை ,தண்டுக்கீரை ,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்

Sep 24, 2024

கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி

கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி தான், கை தட்டுவதன் மூலமாக ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக  வைத்திருக்க உதவும்.

Sep 22, 2024

வயிற்றை சுத்தம் செய்ய சுலப வழி.

வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்யல் போதும் வயிறு சுத்தமாகி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு ஏழு நாட்க்கள் தொடர்ந்து ,ஏதாவது ஒரு கீரை கடையல் குழம்பு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதில் முருங்கைக் கீரை பொரியல் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இப்படி செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Sep 20, 2024

இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்க ஊற வைத்த உலர் திராட்சை

தினமும் இரவில் 5 உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடித்துவிட்டு, திராட்சைகளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகள் குறையும், சிறுநீரகப் பிரச்சனைகள் குணமாகும். உடல் வெப்பமும் தணியும், பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு அருமருந்து, மலச்சிக்கல், எலும்பு பிரச்சனைகள் தீரும் மற்றும் ஆண்கள் விறைப்புத் தன்மையை குணப்படுத்தும்.

Sep 19, 2024

வைட்டமின் பி. கே. நிறைந்துள்ள பச்சைப் பட்டாணி

வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.மறதி நோய் வராமல் காக்கும்.சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.இதயத்தைப் பாதுகாக்கும்.சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.வைட்டமின் பி. கே. நிறைந்துள்ளன.புரதம், நார்ச்சத்து, கால்சியம் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது.

Sep 18, 2024

பூச்சிகடிக்கு ஊமத்தை செடி

ஊமத்தை செடியின் பூ, இலை, காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள், வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேன், பூரான், வண்டு போன்ற ஏதாவதொன்று கடித்துவிட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து பற்று போட வேண்டும்.ஊமத்தையை உட்புற உணவாக அல்லாமல் வெளிப்புறமாக எடுத்து கொள்வது நல்லது.

Sep 17, 2024

பாதத்தில் ரத்த  ஓட்டம் சீராக....

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை, விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.வாழைப்பூவை  பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும். இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி மடக்கும், பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த  ஓட்டம் சீராகும்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 36 37

AD's



More News