25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.07.2025) முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினர் 03.07.2025 மற்றும் 04.07.2025 ஆகிய 2 நாட்கள் வத்திராயிருப்பு வட்டத்தில் நியாய விலை கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விருதுநகர் மத்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், துணை ஆட்சியர் /மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News