கட்டிப் பெருங்காயம் சுலபமாக பயன்படுத்த ...
கட்டிப் பெருங்காயத்தை நறுக்குவதற்கு, கடைகளில் கிடைக்கும் பாக்கு வெட்டி வாங்கி வைத்து கொள்ளலாம். பெருங்காயம் இளகி இருக்கும் போதே சிறிய துண்டுகளாக்கி, சிறிது அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து நிழலில் உலர்த்தி, எடுத்து வைத்தால், பயன்படுத்த சுலபமாக இருக்கும்.
முந்திரியில் உள்ள தாமிரச்சத்து, தலை முடியின் நிறத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
அன்னாசி பழத்தில் மக்னீஷிய சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகள் வலுவடையவும், அதைச் சார்ந்துள்ள தசைகள் வலுவடையவும் அடிக்கடி சாப்பிடலாம்.
பிளாஸுக்குகளின் பயன்பாடு முடிந்ததும் நன்றாக சுத்தம் செய்து உலர்த்திய பின் அதில் ஒரு நியூஸ் பேப்பரை சுருட்டி உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும்.இதனால் கெட்ட வாடை வராமல் இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும் போது, சாதம் சேர்ப்பதற்கு முன்பு இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின்பு சாதத்தில் போட்டுக் கிளறினால் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply