சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில், 2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1.0 கோடி செலவில் "பசுமை சாம்பியன் விருது" வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள்/ நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு/ தொழில்துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது. பின்வரும் துறை (பிற சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் உட்பட):1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு3. சுற்றுச்சூழல்பாதுகாப்பு4. புதுமையான பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்.5. நிலையான வளர்ச்சி6. திடக்கழிவு மேலாண்மை7. நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு8. காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு9. உமிழ்வு குறைப்பு10. பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்11. சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள்12. கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை,13. பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு (DLAC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும். மேற்கூறிய விருதுக்கு நிரப்ப வேண்டிய வடிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.qov.in) உள்ளது.கூடுதல் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 20.01.2026 அன்றே கடைசி தேதியாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் நகராட்சி மற்றும்வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டபணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 361 பயனாளிகளுக்கு ரூ.30.93 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இன்றைக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வகையில் உதவியாக இருக்கிறது என்பதையெல்லாம் உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய நிகழ்ச்சியாக இத்தினத்தினை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நமது விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் முன்னேற வேண்டும் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் மாற்றுத்திறனாளிகளை நம்முடைய வீட்டிலே கூட அலட்சியமாகவும், சுமையாகவும் பார்த்தார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு மூலையிலே முடங்கியிருந்தார்கள்.சராசரியாக இரண்டு கைகள் கால்கள் இருப்பவர்கள் செய்யும் செயல்களை மாற்றுத்திறனாளிகளும் செய்யக் கூடிய அளவிற்கு இயற்கையாகவே அவர்கள் உடம்பில் இருந்து திறன்கள் இருக்கின்றன. எனவே, தான் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்கலைஞர்அவர்கள்மாற்றுத்திறனாளிகள்எனபெயர்மாற்றம்செய்துஅவர்களைசிறப்புசெய்துள்ளார்.சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும் சாதாரண மனிதர்களை விட ஒரு பங்கு அதிகமாக திறன் பெற்றிருக்கக் கூடியவர்கள் மாற்றுத்திறனாளிகள். எனவே, தான் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டாசு விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பராமரிப்பு மற்றும் உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறார்.வீட்டில் தாய்மார்களின் பனிச்சுமை காரணமாக குழந்தைகள் பல நேரங்களில் காலை உணவை எடுக்காமலேயே பள்ளிக்கு சென்று வருகின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.வயதானவர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்களை சுமந்து கொண்டு வரும் சிரமத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாருக்கு எதை செய்யலாம், எப்படி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய அரசானது, நிதிச்சுமைக்கு ஏற்றார் போல் தான் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு காலத்தில் பட்டதாரி முடித்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்த நிலை மாறி இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரியும் தெருவுக்கு மூன்று மருத்துவம் படித்த மாணவர்களும் இருக்கிறார்கள். படித்த இளைஞர்களிடையே போட்டிகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கான திறமையை வளர்ப்பதன் மூலமும், திறன்களை வளர்ப்பதன் மூலமும் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சிகளைய அரசு எடுத்து அவர்களுக்கான திறன் வகுப்பு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகை மற்றும் பராமரிப்புத் தொகைகளை வழங்குவதோடு அவர்கள் பிற்காலத்தில் வேலை வாய்ப்பை பெரும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 100 நபர்களுக்கு தலா ரூ.14,500/- வீதம் ரூ.1,45,000/- மதிப்பில் ஸ்மார்ட் போன்களும், 125 நபர்களுக்கு தலா ரூ.6,500/- வீதம் ரூ.8,12,500/- மதிப்பில் தையல் இயந்திரங்களும், 4 நபர்களுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.63,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும், 7 நபர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.14,000 மதிப்பில் பிரெய்லி கடிகாரங்களும், 50 நபர்களுக்கு தலா ரூ.3,300/- வீதம் ரூ.1,65,000/- மதிப்பில் காதொலிக் கருவிகளும் என மொத்தம் 286 பயனாளிகளுக்கு ரூ.25.04 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துகளில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 102 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது, 27 குழந்தைகளுக்கு (வெளிமாவட்டத்தைச் சார்ந்த 8-குழந்தைகள் உட்பட) ரூ.5,18,000/- மதிப்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.4,000/- வீதம் ரூ.8,000/- மும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.6,000/- வீதம் ரூ.12,000/- மும், கல்லூரி பயிலும் 1 மாணவருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.313/- மும், என மொத்தம் 32 மாணவர்களுக்கு ரூ.5.38 இலட்சத்திற்கான ஆணைகளும், மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த 39 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.மேலும், சிறந்து விளங்கிய மூன்று பள்ளிகளுக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் மற்றும் சுழல் கோப்பைகளும், தமிழ் இலக்கியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்று, எண்ணற்ற திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் பயின்று நான் முதல்வன் - உயர்வுக்குப்படி திட்டத்தின் மூலம் பயன்பெற்று மும்பை ஐஐடி-யில் பயன்று வரும் செல்வி.யோகேஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி மாணவியை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குடிமைப்பணிக்கான முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வரும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 ஊக்கத்தொகைக்கான காசோலையினைவருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குபல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஆஸ்திரேலியா,அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், மற்றும் நியூசிலாந்து போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலை கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்ட படிப்பு பயில அடிப்படையான International English Language Testing System (IELTS) சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சியினை பெற 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த மாணாக்கர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும் விடுதியில்தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம்(www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 08.12.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ITI -- இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC 5) ELECTRICIAN 6) Turner 7) Welder 8) Wire man 9) Surveyor 10) COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற்நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700- முதல் ரூ.13500-வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate- NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (01.12.2025) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கிராம கலை நிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் மற்றும் ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ‘உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1” அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய கருப்பொருளாக ‘இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்” (Overcoming disruption, transforming the AIDS response) என்பதனை மையமாக வைத்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி. /எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு சேவை அமைப்புகளை மாவட்ட அளவில் ஓருங்கிணைத்து எச்.ஐ.வி தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை அளித்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் எச்.ஐ.வி புதிய தொற்றுகள் இல்லாத நிலையினை உருவாக்கிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழக சுகாதார துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும்பிற துறைகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.த.ஜெகவீரபாண்டியன் குணசேகரன்(சிவகாசி), இணை இயக்குநர்(பொ) (ஊரகம் மற்றும் மருத்துவப் பணிகள்) மரு.காளிராஜ், துணை இயக்குநர்(தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம்) மரு.ராஜன், மாவட்ட மேற்பார்வையாளர்(எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு) திரு.அய்யனார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (01.12.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த திருநங்கைக்கு மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு மற்றும் விருதுநகர் முத்தால் நகர் கூரைக்குண்டு தொடக்கப்பள்ளியில் (29.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக, வெளியூரில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.மேலும் திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வழங்கப்பட்டுள்ள 16,10,778வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களில் 13,37,911 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 28.11.2025 வெள்ளிக் கிழமை முதல் 30.11.2025 ஞாயிற்றுக் கிழமை ஆகிய 3 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்துநடத்தப்பட்டு வருகிறது.எனவே, இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திபடிவங்களை பெற்று பூர்த்தி செய்துதிரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படிமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு, அரசு மேல்நிலைப் பள்ளியில், (28.11.2025) அசோக் லேலண்ட் அறக்கட்டளை (Ashok Leyland Foundation) “சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ரோடு டு ஸ்கூல் (Road to School – RTS)” என்ற திட்டத்தினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு த.தங்கம் தென்னரசு அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டினுடைய சாலை போக்குவரத்து வசதிகளுக்கு, அசோக் லேலண்ட் நிறுவனமானது வழங்கி வரும் மகத்தான சேவைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித்துறையிலே எந்தெந்த இடங்களிலெல்லாம் இந்நிறுவனத்தின் பங்களிப்பு தேவையாக இருக்கிறதோ, அதை கண்டறிந்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் 8-மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு ஏறத்தாழ 8-இலட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் ரோடு டு ஸ்கூல் என்ற திட்டமானது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனைப் போல, நம்முடைய பகுதிகளில் 161 பள்ளிகளில், 5,500 மாணவர்கள் பயனடையத்தக்க வகையில் இன்று இத்திட்டமானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் மிகப்பெரும் புரட்சி ஏற்பட்டுள்ள ஒரு துறை என்று சொன்னால் அது பள்ளிக் கல்வித்துறையே ஆகும். குறிப்பாக, நம்முடைய பகுதிகளில் பள்ளிகள் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கி.மீ தொலைவில் ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று கி.மீ தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளியும், ஏழு கி.மீ தொலைவில் ஒரு உயர்நிலைப்பள்ளியும் அமைக்கப்பட வேண்டும் என்ற அன்றைய கால திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்திலே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தினை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்த இந்த ரோடு டு ஸ்கூல் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இது மட்டுமல்லாமல், உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தினை உருவாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே, அசோக் லேலண்ட் நிறுவனமானது இப்பணியினை அசோக் லேலண்ட் அறக்கட்டளை மூலம் இப்பணியினை ஒரு சமுதாயப் பணியாக மேற்கொண்டு வருகிறது. நாம் அனைவரும் சமுதாயத்தால் பயன் பெற்றுள்ளோம் சமுதாயத்தால் பயன் பெற்ற நாம் அதன் ஒரு பகுதியை சமுதாயத்திற்கு அளிப்பது தான் சிறந்தது.ரோடு டு ஸ்கூல் (Road to School – RTS) திட்டம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் கணிதத் திறன்களில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதுடன், உடல்நலம், கலை மற்றும் விளையாட்டு கல்வி போன்ற வாழ்க்கைத் திறன் அடிப்படையிலான இணை–பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து முழுமையான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், பள்ளிகளின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சமூகங்களில் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் கல்விக்கு தடையாக இருக்கும் சமூக–பொருளாதார சவால்களை குறைப்பதற்கும், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதற்கும் வழிவகுக்கின்றன.இத்துடன், வருகை விகிதத்தை உயர்த்துதல், சுகாதார மேம்பாடு, சமூகத்தில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் சமூக அங்கத்தினர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை விரிவாக்குதல் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டமானது, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் மொத்தம் 161 பள்ளிகள் மற்றும் 5,500 மாணவர்கள் பயனடைய உள்ளனர். இத்திட்டம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வரை தொடரப்படவுள்ளது. நம்முடைய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் திரு. கு.அரவிந்தன், முதன்மை செயல் அலுவலர்(அசோக் லேலண்ட் அறக்கட்டளை) திரு. டி. சசிக்குமார், திட்ட இயக்குநர்(லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன்) திரு.கிரிஷ், வளநபர்(லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன்) செல்வி ஜெயப்பிரியா, மல்லாங்கிணறு பேரூராட்சித்தலைவர் திரு.துளசிதாஸ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் (28.11.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத வைப்புத் தொகைக்கான தீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், இந்த முகாமானது 04.10.2025 முதல் 31.12.2025 வரை 3 மாதங்கள் நடைபெறும். வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்பு தொகையாளர்கள் மற்றும் இறந்த வைப்பு தொகையாளர்களின் வாரிசுகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமை கோரப்படாத தொகையினை வட்டியுடன் பெறலாம்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உரிமை கோரப்படாத சுமார் 3,48,662 கணக்குகளில் ரூபாய் 66.48 கோடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 364 கணக்குகளில் ரூபாய் 67.78 லட்சம் இதுவரை தீர்வு காணப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் இருப்பினை www.udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, அப்பணத்தை வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் இருந்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ரா.பாண்டிச்செல்வன், அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.