மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length) சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base 390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், தற்போது நெல், மக்காசோளம் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெவ்வேறான பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர்களின் தாள்கள், கட்டைகள் மற்றும் இதர பிற கழிவுகள், நிலக்கடலை தொலி மற்றும் உமி தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு கதிர்மணிகள் எடுத்தபின் வரும் கழிவுகளை தான் நாம் பண்ணைக் கழிவுகள் என்று அழைக்கிறோம். அவற்றை எளிதாக தீ வைத்து சுற்றுப்புற சூழலை பாதிக்க விடும் நிலையில் அவற்றை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம்..பண்ணைக் கழிவுகளை சேகரித்தல்விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர் கழிவுகளை ஒரு சேர சேகரித்து அவற்றை பண்ணைகளில் ஏதாவது ஒரு பகுதியில் அதுவும் நீர் ஆதாரம், சாலை போக்குவரத்து உள்ள மேடான இடத்தில் சேகரித்த பண்ணை கழிவுகளை குவியலாக வைக்;க வேண்டும். கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிட வேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக கழிவுகள் இருந்தால் எளிதாக மக்கிட முடியாது. பசுமை நிற (பச்சை இலைகள்) இலைகளையும் காய்ந்து போன இலைகளையும் கலந்து ஒன்றுடன் ஒன்றாக சேர்க்க வேண்டும். கரிமசத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிம சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால் மக்குதல் நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்;தால் தான் எளிதாக மக்கும். மக்குவித்தலின் போது அதிகம் கரிமசத்து , தழைசத்து உள்ள பண்ணை கழிவுகளை மாற்றி அடுக்கி போடும் போது விரைவாக மக்கும்.மக்குதல் குவியல் அமைத்தல்குறைந்தது, 4அடி உயரத்திற்கு கழிவுகளை போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இடம் சிறிது உயரத்திலும் நல்ல நிழலில் இருக்க வேண்டும். ஒரு டன் பண்ணை கழிவுகளுக்கு 2 கிலோ வேஸ்ட்-டி-கம்போஸ்டர் /TNAU MICROBYOL CULTURE) இதில் ஏதாவது ஒன்றை 20லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதனை குப்பை குவியல் மீது தெளிக்க வேண்டும்.சுஞ்சாணக் கரைசல் நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாராமாகும். மேலேகண்ட கூட்டுக்கலவை கிடைக்காத போது பசுஞ்சாணக் கரைசலை தெளிக்கலாம். 40 கிலோ பசுஞ்சாணத்தை ஒரு டன் பண்ணைக் கழிவுகளுக்கு மக்குவதற்கு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்ட வசதி ஏற்படுத்திட வேண்டும். மக்கு உரம் தயாரிக்கும் போது 60மூ ஈரப்பதமாக இருக்க வேண்டும்.மக்கிய உரத்தை எப்படி கண்டுபிடிப்பது ?மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும் ஒவ்வொரு துகள்களின் அளவும் குறைந்தும் காணப்படும். இவற்றை 4 மி.மீ சல்லடைக் கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்காத கழிவுகளை தனியாக சேகரித்து மறுபடியும் மக்கிட செய்ய வேண்டும்.செறிவூட்;டப்பட்ட மக்கிய உரமாக மாற்றுவது எப்படி?சலித்த உரத்துடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்றவைகளை 2% கலந்து அவற்றை 40% ஈரப்பதத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 20 நாட்கள் அப்படியே வைத்திருந்தால் அது செறிவூட்டப்பட்ட உரமாகும். (ENRICHED MANURE)மக்கி உரத்தை நிலத்தில் இடுவதால் என்ன பயன்கள்?1) மக்கிய உரத்தை மண்ணில் கலப்பதால், மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்தி மண்ணின் கட்டமைப்பு மாறுகிறது.2) தாவர கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளைப்பொருட்களின் தரம் உயருகிறது.3) குறைந்த செலவிலே தயாரிக்கப்படுவதால் சாகுபடிக்கான உரச்செலவு கணிசமாக குறையும்எனவ, தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை தீயிட்டு எரிக்கமால் எளிதாக மக்கிட வைத்து நிலத்தில் இடுவதால் சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதுடன் உரச்செலவும் கணிசமாக குறைவதுடன் மண்ணும் வளப்படுத்தப்படுகிறது என விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (05.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சியில், புதிய மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சிவலிங்காபுரம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.சிவலிங்காபுரம் ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், தலா ரூ.1.50 இலட்சம் மானியத்தில் இரண்டு வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், குறிச்சியார்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், கிழவிகுளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15.15 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி, நாச்சியார்புரம் கிராமத்தில் (05.02.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் கோவில்புலிகுத்தி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்,கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்ததார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 24 திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். தாங்கள் ஆரோக்கியத்தை கவனித்து நல்ல முறையில் தங்களுக்கு வழங்கப்படும் வீடுகளை பயன்படுத்த வேண்டும்.திருநங்கைகளை நாம் அரவணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுத்து வருகிறதோ, அதே அளவிற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.நமது மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு என்று அமையக்கூடிய இரண்டாவது தனிக் குடியிருப்பாக இது அமைந்திருக்கிறது. இது நிச்சியமாக வேறு எந்த மாவட்டத்திலும் இயலாத அளவிற்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சர் அவர்கள் மிகுந்த உறுதுணையோடு இருந்தார்கள். ஏனென்றால், இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் அரசால் வழங்கக்கூடிய தொகையானது ரூபாய் 3,50,000/- ஆகும்.இந்த ரூ.3,50,000ஃ- த்தினை இரண்டு மூன்று தவணைகளாக அந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவர்களே அவர்களுடைய வசதிக்கேற்ப, தேவைக்கேற்ப கட்டிக்கொள்ளக்கூடிய வாய்ப்பை கலைஞர் கனவு இல்லம் திட்டம் வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் சமூகத்தில், பொருளாதாரத்தில், மிகுந்த நலிவுற்ற, ஒரு நிலையான வருமானம் இல்லாத விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.ஒரு குழுவாக அமைந்து, அந்த குழுவினுடைய ஒத்துழைப்போடு ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு உண்டான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் மானியத்துடன் மீதமுள்ள தொகைக்காக சமூக பொறுப்பு நிதியை பெற்று தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த திட்டத்தை மிக நேர்த்தியாகவும், அழகாகவும், மிகுந்த தரத்தோடு முடிப்பதற்கு அமைச்சர் அவர்கள் உறுதுணையோடு இருந் தார்.. அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்., இந்த திருநங்கைகளுக்கு அரசின் உடைய திட்டங்களை எல்லாம் பயன்படுத்தி, அவர்களின்; வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சிறப்பான திட்டங்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் வருகின்ற 07.02.2025 அன்று முகாம் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தகவல்.TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான/சொந்தமாக உள்ள நிறுவனங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சந்தைஇணைப்புகள், நிதி மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது.பெண் தொழில்முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத்தேவையான இணக்கப்பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும்விரிவாக்கத்திற்கும் ஒருபெரும் தடையாகவுள்ளது.இதுகுறித்து, மதுரை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினைTN-RISE ஏற்பாடு செய்துள்ளது. கீழ்க்கண்ட சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன :● PAN● TAN●உதயம் (UDYAM)● FSSAI● GST●வர்த்தக முத்திரை (Trade Mark)●காப்புரிமை தாக்கல் (Patent Filing)● DPIIT பதிவு (DPIIT Registration)●நிறுவனப்பதிவு (Company Registration)●இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export Certificate Registration)●ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration)● NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application)●இன்குபேஷன்டிரைவ் (Incubation Drive)●கடன் வசதி இணைப்பு (Credit Facilitation)●பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)மேற்காண் சேவைகளின் மூலம் பெண் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் பிரதானசாலை மதுரையில் வருகின்ற 07.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறுகிறது.தொடர்புக்கு: 1) கார்த்திகேயன் (EDO)- 9994142115 2) மாரிகணேஷ் (EFO)- 9514737043 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்