25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 05, 2025

மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தை பற்றிய பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கு குறித்து ஆவணப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கும் ஒரு சமூகத்தில் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைமுறை என்று சொல்லக்கூடிய 30 ஆண்டுகளுக்கும் இந்த நான்கும் மாற்றமடையும். அதை ஆவணப்படுத்துவது என்பது எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம், கரிசல் இலக்கிய ஆய்வுக்கோவை - 2023, கரிசல் இலக்கிய மலர், கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்- பன்னாட்டுக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், Glimpses Of Virudhunagar District, கரிசல் நிலவியல் கதைகள், ECHOES OF VIRUDHUNAGAR ETHNIC VISUAL CELEBRATION, விருதுநகர் மாவட்டத்தில் காந்தி, கற்றது ஒழுகு மாணவர் விழிப்புணர்வு கையேடு, தமிழ்க் கவிதைகள் ஓர் அறிமுகம், கி.ரா.வின் முத்து கதைகள் பத்து, மரமும் மரபும் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு என்ன மாதிரியான வழக்காடுகள் இருக்கின்றது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக சொலவடைகள் என்ற கிராமப்புறத்தில் சொல்லக்கூடிய பழமொழிகள், விடுகதைகள், கிராமத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கைகள் சார்ந்த கதைகளாக இருக்கக்கூடிய நாட்டார் கதைகள் போன்றவைகள் நிறைய ஆவண படுத்தாமல் இருக்கிறது. அதனை பெரிய குழு அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, அதனை இரண்டு விதமாக ஆவண படுத்துகிறார்கள்.ஒன்று புத்தகமாகவும், மற்றொன்று வாய்மொழியாக சொல்லக்கூடியதை வீடியோ மூலமாகவும் ஆவணப்படுத்துகிறார்கள்.ஏறத்தாழ ஒரு 18 மணி நேரம் ஆவணப்படுத்த கூடிய வீடியோவை எடுத்து நமது கரிசல் கழகம் ஆவணப்படுத்தி இருக்கிறது. அதன்படி, புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ள கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள் (மரபும் புதிதும்) ஆகிய மூன்று நூல்கள் இன்று வெளியிடப்;பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 05, 2025

மினி பேருந்துக்கான இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது .

மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ்  மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length)  சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base  390cm-க்கு  மிகாமல் இருக்க வேண்டும்.7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 05, 2025

விவசாயக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், தற்போது நெல், மக்காசோளம் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெவ்வேறான பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர்களின் தாள்கள், கட்டைகள் மற்றும் இதர பிற கழிவுகள், நிலக்கடலை தொலி மற்றும் உமி தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு கதிர்மணிகள் எடுத்தபின் வரும் கழிவுகளை தான் நாம் பண்ணைக் கழிவுகள் என்று அழைக்கிறோம். அவற்றை எளிதாக தீ வைத்து சுற்றுப்புற சூழலை பாதிக்க விடும் நிலையில் அவற்றை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம்..பண்ணைக் கழிவுகளை சேகரித்தல்விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர் கழிவுகளை ஒரு சேர சேகரித்து அவற்றை பண்ணைகளில் ஏதாவது ஒரு பகுதியில் அதுவும் நீர் ஆதாரம், சாலை போக்குவரத்து உள்ள மேடான இடத்தில் சேகரித்த பண்ணை கழிவுகளை குவியலாக வைக்;க வேண்டும். கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிட வேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக கழிவுகள் இருந்தால் எளிதாக மக்கிட முடியாது. பசுமை நிற (பச்சை இலைகள்) இலைகளையும் காய்ந்து போன இலைகளையும் கலந்து ஒன்றுடன் ஒன்றாக சேர்க்க வேண்டும். கரிமசத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிம சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால் மக்குதல் நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்;தால் தான் எளிதாக மக்கும். மக்குவித்தலின் போது அதிகம் கரிமசத்து , தழைசத்து உள்ள பண்ணை கழிவுகளை மாற்றி அடுக்கி போடும் போது விரைவாக மக்கும்.மக்குதல் குவியல் அமைத்தல்குறைந்தது, 4அடி உயரத்திற்கு கழிவுகளை போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இடம் சிறிது உயரத்திலும் நல்ல நிழலில் இருக்க வேண்டும். ஒரு டன் பண்ணை கழிவுகளுக்கு 2 கிலோ வேஸ்ட்-டி-கம்போஸ்டர் /TNAU MICROBYOL CULTURE)  இதில் ஏதாவது ஒன்றை 20லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதனை குப்பை குவியல் மீது தெளிக்க வேண்டும்.சுஞ்சாணக் கரைசல் நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாராமாகும். மேலேகண்ட கூட்டுக்கலவை கிடைக்காத போது பசுஞ்சாணக் கரைசலை தெளிக்கலாம். 40 கிலோ பசுஞ்சாணத்தை ஒரு டன் பண்ணைக் கழிவுகளுக்கு மக்குவதற்கு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கம்போஸ்ட்  படுக்கையில் காற்றோட்ட வசதி ஏற்படுத்திட வேண்டும். மக்கு உரம் தயாரிக்கும் போது 60மூ ஈரப்பதமாக இருக்க வேண்டும்.மக்கிய உரத்தை எப்படி கண்டுபிடிப்பது ?மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும் ஒவ்வொரு துகள்களின் அளவும் குறைந்தும் காணப்படும். இவற்றை 4 மி.மீ சல்லடைக் கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்காத கழிவுகளை தனியாக சேகரித்து மறுபடியும் மக்கிட செய்ய வேண்டும்.செறிவூட்;டப்பட்ட மக்கிய உரமாக மாற்றுவது எப்படி?சலித்த உரத்துடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்றவைகளை 2%  கலந்து அவற்றை 40%  ஈரப்பதத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 20 நாட்கள் அப்படியே வைத்திருந்தால் அது செறிவூட்டப்பட்ட உரமாகும். (ENRICHED MANURE)மக்கி உரத்தை நிலத்தில் இடுவதால் என்ன பயன்கள்?1) மக்கிய உரத்தை மண்ணில் கலப்பதால், மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்தி மண்ணின் கட்டமைப்பு மாறுகிறது.2) தாவர கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளைப்பொருட்களின் தரம் உயருகிறது.3) குறைந்த செலவிலே தயாரிக்கப்படுவதால் சாகுபடிக்கான உரச்செலவு கணிசமாக குறையும்எனவ, தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை தீயிட்டு எரிக்கமால் எளிதாக மக்கிட வைத்து நிலத்தில் இடுவதால் சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதுடன் உரச்செலவும் கணிசமாக குறைவதுடன் மண்ணும் வளப்படுத்தப்படுகிறது என விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 05, 2025

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (05.02.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி,  இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சியில், புதிய மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சிவலிங்காபுரம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.சிவலிங்காபுரம் ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், தலா ரூ.1.50 இலட்சம் மானியத்தில் இரண்டு வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், குறிச்சியார்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், கிழவிகுளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15.15 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

AD's



More News